என் மலர்
பாடகர் பால முரளி கிருஷ்ணாவின் மனைவி நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
மறைந்த கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா. இவரது மனைவி அன்ன பூரணா. 82 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று பிற்பகல் அவர் வீட்டில் மரணம் அடைந்தார்.
இன்று காலை 8 மணிக்கு மயிலாப்பூர் கதீட்ரல் சாலையில் உள்ள வீட்டில் தொடங்கியது. அதன் பிறகு மயிலாப்பூர் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப் படுகிறது.
பாலமுரளிகிருஷ்ணா - அன்னபூர்ணா தம்பதிக்கு 3 மகன்களும், 3 மகள் களும் உள்ளனர். அன்ன பூர்ணாவுக்கு 14 வயதிலேயே பாலமுரளி கிருஷ்ணாவுடன் திருமணம் நடந்தது.
பாலமுரளி கிருஷ்ணா 3 மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார். அதன் பிறகு இவரது உடல் நிலையும் மோசம் அடைந்தது.
இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.
இன்று காலை 8 மணிக்கு மயிலாப்பூர் கதீட்ரல் சாலையில் உள்ள வீட்டில் தொடங்கியது. அதன் பிறகு மயிலாப்பூர் சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப் படுகிறது.
பாலமுரளிகிருஷ்ணா - அன்னபூர்ணா தம்பதிக்கு 3 மகன்களும், 3 மகள் களும் உள்ளனர். அன்ன பூர்ணாவுக்கு 14 வயதிலேயே பாலமுரளி கிருஷ்ணாவுடன் திருமணம் நடந்தது.
பாலமுரளி கிருஷ்ணா 3 மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார். அதன் பிறகு இவரது உடல் நிலையும் மோசம் அடைந்தது.
இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.
கமலஹாசன் தயாரிப்பில் அவரே இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது பாகமான `விஸ்வரூபம் 2` குறித்த முக்கிய தகவலை கமலஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த தகவலை கீழே பார்க்கலாம்.
கமலஹாசன் இயக்கி நடித்த கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான `விஸ்வரூபம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இரு பாகமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் முதல் பாகம் வெளியான நிலையில், இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் `விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளில் தொய்வு ஏற்ப்பட்டது.
மேலும், பல சிக்கல்களை சந்தித்த பின்னரே `விஸ்வரூபம்' படத்தை கமல் ரிலீஸ் செய்தார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2' படம் தயாராகி வருகிறது.
`விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமல் `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம் 2' படத்தின் முக்கிய பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும், தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களை மட்டுமே சமாளிக்க வேண்டியிருப்பதாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
`விஸ்வரூபம்' முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட அனைவரும் இரண்டாவது பாகத்திலும் நடித்துளனர். இப்படத்தை கமல் அவரது சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஸன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், 6 மாதங்களில் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பல சிக்கல்களை சந்தித்த பின்னரே `விஸ்வரூபம்' படத்தை கமல் ரிலீஸ் செய்தார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2' படம் தயாராகி வருகிறது.
`விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கமல் `சபாஷ் நாயுடு' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம் 2' படத்தின் முக்கிய பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும், தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களை மட்டுமே சமாளிக்க வேண்டியிருப்பதாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
`விஸ்வரூபம்' முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட அனைவரும் இரண்டாவது பாகத்திலும் நடித்துளனர். இப்படத்தை கமல் அவரது சொந்த தயாரிப்பில் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஸன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், 6 மாதங்களில் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ரஜனி படத்தின் தலைப்பை கைப்பற்றியுள்ளது படக்குழு. அது என்ன தலைப்பு என்பதை கீழே பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரது படத்திலும் ரஜினியை முன்னிலைப்படுத்தி
பல காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினி நடிப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `வேலைக்காரன்'. மாபெரும் வெற்றி பெற்ற `வேலைக்காரன்' படத்தலைப்பையே மோகன் ராஜா தனது அடுத்த படத்திற்காக கைப்பற்றியுள்ளார்.
இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பஹத் பாசில், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சதிஷ், ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் `வேலைக்காரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி படத்தை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரது படத்திலும் ரஜினியை முன்னிலைப்படுத்தி
பல காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினி நடிப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `வேலைக்காரன்'. மாபெரும் வெற்றி பெற்ற `வேலைக்காரன்' படத்தலைப்பையே மோகன் ராஜா தனது அடுத்த படத்திற்காக கைப்பற்றியுள்ளார்.
இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பஹத் பாசில், சினேகா, ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சதிஷ், ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் `வேலைக்காரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி படத்தை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் சிக்ஸ் பேக் காட்சிக்கு இசையமைத்தது குறித்து அனிருத் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அஜித் மற்றும் `விவேகம்' படம் குறித்து அப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், சில ருசீகர தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், `வேதாளம்' படத்திற்கு பிறகு பல அறுவைசிகிச்சைகளை மேற்கொண்ட அஜித், விவேகம் படத்திற்காக தனது உடலை வருத்தி கட்டுக்கோப்பான உடலுக்கு மாறியுள்ளார்.
விவேகம் படத்தில் அஜித்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ப, புதுமையான முறையில் இசையமைத்துள்ளதாக அனிருத் தெரிவித்தார். குறிப்பாக தல அவரது கட்டுக்கோப்பான சிக்ஸ் பேக் உடலை காட்டும் ஒரு காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார். அந்த காட்சியில் வரும் பின்னணி இசை அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றார்.
மேலும் `விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் பிரபல ஹிப் ஹாப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'விவேகம்' படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை தல பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மார்ச் 2-வது வாரத்தில் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் அஜித்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்நிலையில், அஜித் மற்றும் `விவேகம்' படம் குறித்து அப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், சில ருசீகர தகவல்களை தெரிவித்துள்ளார். இதில், `வேதாளம்' படத்திற்கு பிறகு பல அறுவைசிகிச்சைகளை மேற்கொண்ட அஜித், விவேகம் படத்திற்காக தனது உடலை வருத்தி கட்டுக்கோப்பான உடலுக்கு மாறியுள்ளார்.
விவேகம் படத்தில் அஜித்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ப, புதுமையான முறையில் இசையமைத்துள்ளதாக அனிருத் தெரிவித்தார். குறிப்பாக தல அவரது கட்டுக்கோப்பான சிக்ஸ் பேக் உடலை காட்டும் ஒரு காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார். அந்த காட்சியில் வரும் பின்னணி இசை அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றார்.
மேலும் `விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் பிரபல ஹிப் ஹாப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'விவேகம்' படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை தல பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மார்ச் 2-வது வாரத்தில் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் அஜித்துடன், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இளைஞர்களின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள காதல் காவியமான ‘காதல் கண்கட்டுதே’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் கே.ஜி. படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறான். நாயகி அதுல்யா ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து வருகிறாள். இருவரும் ஒருமுறை சந்தித்து நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.
இந்நிலையில், அதுல்யா வேறு ஊருக்கு மாற்றலாக போகிறாள். இருப்பினும், நாயகனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறாள். அதுல்யாவுக்கு கூடவே பணிபுரியும் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவனிடம் பழகுவதை தனது காதலனிடம் மறைக்காமல் போனில் அவனைப் பற்றிய தகவலை சொல்கிறாள்.
அடிக்கடி, தன்னுடன் வேலை பார்க்கும் அந்த நபரைப் பற்றி நாயகி கூறுவதை கேட்கும் நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவள்மீது வெறுப்பு வருகிறது. இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள். இந்த பிரிவு தற்காலிகமாக இருந்ததா? அல்லது நீடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவராஜ். பெரிய, பெரிய இயக்குனர்களால்தான் இந்த மாதிரியான அழகான, நேர்த்தியான படத்தை கொடுக்க முடியும் என்ற நிபந்தனையும் மீண்டும் ஒரு புதிய இயக்குனர் முறியடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
இன்றைய கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
காதல், மோதல், ஊடல் என தமிழ் சினிமாவுக்கு அதர பழசான கதையாக இருந்தாலும், அதை எடுத்தவிதம் அருமை. ரொம்பவும் எளிமையான நடிப்பு, ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரங்கள் என படத்தில் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடியதாக இருக்கின்றன.
பவணின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் கதைக்கு தேவையானதை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சிவராஜின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘காதல் கண்கட்டுதே’ கைதட்டலாம்.
இந்நிலையில், அதுல்யா வேறு ஊருக்கு மாற்றலாக போகிறாள். இருப்பினும், நாயகனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துகொண்டே இருக்கிறாள். அதுல்யாவுக்கு கூடவே பணிபுரியும் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அவனிடம் பழகுவதை தனது காதலனிடம் மறைக்காமல் போனில் அவனைப் பற்றிய தகவலை சொல்கிறாள்.
அடிக்கடி, தன்னுடன் வேலை பார்க்கும் அந்த நபரைப் பற்றி நாயகி கூறுவதை கேட்கும் நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவள்மீது வெறுப்பு வருகிறது. இதனால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரிந்து போகிறார்கள். இந்த பிரிவு தற்காலிகமாக இருந்ததா? அல்லது நீடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சிவராஜ். பெரிய, பெரிய இயக்குனர்களால்தான் இந்த மாதிரியான அழகான, நேர்த்தியான படத்தை கொடுக்க முடியும் என்ற நிபந்தனையும் மீண்டும் ஒரு புதிய இயக்குனர் முறியடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
இன்றைய கால இளைஞர்களின் வாழ்க்கையை ரொம்பவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கிற கதாபாத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
காதல், மோதல், ஊடல் என தமிழ் சினிமாவுக்கு அதர பழசான கதையாக இருந்தாலும், அதை எடுத்தவிதம் அருமை. ரொம்பவும் எளிமையான நடிப்பு, ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரங்கள் என படத்தில் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடியதாக இருக்கின்றன.
பவணின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையிலும் கதைக்கு தேவையானதை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். சிவராஜின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘காதல் கண்கட்டுதே’ கைதட்டலாம்.
`விஜய் 61' படத்தில் ரசிகர்களுக்கு புதுமையான விருந்து ஒன்று காத்திருக்கிறது. அது என்னவென்பதை கீழே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிமுகங்கள், தொழில்நுட்பங்கள் என அதன் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் நடிகர்களும், நடிகைகளும் தங்களது பங்களிப்பை பலவிதங்களில் அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர்கள் ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் ஏதுமின்றி தாமாகவே நடித்து ரசிகர்களை கவர்கின்றனர். இவ்வாறு டூப் போடாமல் ஸ்டன்ட்களில் ஈடுபடுவது நடிகர் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல. முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `தெறி' படத்தில் 90 அடி பாலத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பு அம்சங்களுமின்றி தண்ணீரில் குதித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அந்த வகையில் `விஜய் 61' படத்தில் அவரது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான விருந்து காத்திருக்கிறது. விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு முக்கியமான காட்சியில் விஜய் பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி ஆபத்தான ஸ்டன்ட் ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். இந்தகாட்சி திரையில் வரும்போது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர்கள் ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் ஏதுமின்றி தாமாகவே நடித்து ரசிகர்களை கவர்கின்றனர். இவ்வாறு டூப் போடாமல் ஸ்டன்ட்களில் ஈடுபடுவது நடிகர் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல. முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `தெறி' படத்தில் 90 அடி பாலத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பு அம்சங்களுமின்றி தண்ணீரில் குதித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அந்த வகையில் `விஜய் 61' படத்தில் அவரது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான விருந்து காத்திருக்கிறது. விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு முக்கியமான காட்சியில் விஜய் பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி ஆபத்தான ஸ்டன்ட் ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். இந்தகாட்சி திரையில் வரும்போது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
வெளிமாநிலத்தில் பதிவு செய்து விட்டு சொகுசு காரை மும்பையில் ஓட்டிய எந்திரன் பட வில்லன் நடிகருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மும்பையில் சாலை வரி அதிகமாகும். இங்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு 20 சதவீதம் சாலை வரி விதிக்கப்படுகிறது. எனவே பலர் சாலை வரி 2 முதல் 2½ சதவீதம் மட்டும் விதிக்கப்படும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் அல்லது புதுச்சேரி, டையு-டாமன் போன்ற யூனியன் பிரதேசங்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி மும்பையில் பயன்படுத்தி வருகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும்.
இதனால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் ஓட்டப்பட்டு வரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் சட்ட விரோதமாக ஓட்டப்பட்டு வந்த 451 சொகுசு வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கார்கள் சுமார் ரூ.10 கோடி வரி ஏய்ப்பு செய்து வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
பிடிபட்டதில் பிரபல நடிகர் டேனியின் சொகுசு காரும் அடங்கும். அவருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழில் வெளியான எந்திரன் படத்தில் டேனி, வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் ஓட்டப்பட்டு வரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் சட்ட விரோதமாக ஓட்டப்பட்டு வந்த 451 சொகுசு வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கார்கள் சுமார் ரூ.10 கோடி வரி ஏய்ப்பு செய்து வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
பிடிபட்டதில் பிரபல நடிகர் டேனியின் சொகுசு காரும் அடங்கும். அவருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழில் வெளியான எந்திரன் படத்தில் டேனி, வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் திருப்பங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன், டைரக்டர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கருத்துகள் வெளியிட்டு உள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆட்சி அமைக்க நடக்கும் போட்டிகள், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு ஆகியவைபற்றி கருத்துகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
அவரது சமீபத்திய டுவிட்டர் பதிவுகள் வருமாறு:-
“திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வேண்டும். நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருக்கிறது? என்றால் ஜனமாவது நாயகமாவது...”
“107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட 104 செயற்கை கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர். வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழ், வாழிய பாரத மணித்திருநாடு”
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகரும் டைரக்டருமான பாக்யராஜ் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியிருப்பதாவது:-
“சீட்டு கொடுத்தவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்கும் நீ, அந்த சீட்டை எம்.எல்.ஏ. பதவியாக மாற்றிய ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்ககூடாதா?”
இவ்வாறு பாக்யராஜ் கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
“நமது நாட்டில் பல அரசியல்வாதிகள் நூறுகோடி, ஆயிரம் கோடி என்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ஊழல் செய்ததற்கான விலையை கொடுக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக நம்மால் சண்டை போட முடியும். ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தி கேட்க வேண்டும். நீங்கள் மாற்றமாக இருப்பதற்கு உறுதி எடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் மாதவன், ”நம்பிக்கையையும் பழைய இயல்பு வாழ்க்கையையும் கொண்டு வருவதற்கான நேரம் இது. தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கையை மீட்பதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகவும் இது இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 15 நாட்கள் தங்கப்போகும் அடுத்த ஹாலிடே ஸ்பாட் எங்கு இருக்கிறதோ?.. தேசிய செய்தி சேனல்கள் தமிழக பிரச்சினை முடிந்துவிட்டதாக தெரிவித்து வருகின்றன. பிரச்சினையே இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்பது அவற்றுக்கு தெரியவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.எல்.ஏக்களிடம் மக்கள் கேட்கவேண்டும்.
இவ்வாறு ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.
அவரது சமீபத்திய டுவிட்டர் பதிவுகள் வருமாறு:-
“திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே குதிபிடறிபட அவன் ஓடவல்லோ வேண்டும். நின்று நிதானமாய் கூப்பிட்டது போலிருக்கிறது? என்றால் ஜனமாவது நாயகமாவது...”
“107 செயற்கை உறுப்பினரை ஏவியவரை விட 104 செயற்கை கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர். வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழ், வாழிய பாரத மணித்திருநாடு”
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகரும் டைரக்டருமான பாக்யராஜ் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியிருப்பதாவது:-
“சீட்டு கொடுத்தவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைக்கும் நீ, அந்த சீட்டை எம்.எல்.ஏ. பதவியாக மாற்றிய ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்ககூடாதா?”
இவ்வாறு பாக்யராஜ் கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
“நமது நாட்டில் பல அரசியல்வாதிகள் நூறுகோடி, ஆயிரம் கோடி என்று வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ஊழல் செய்ததற்கான விலையை கொடுக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக நம்மால் சண்டை போட முடியும். ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தி கேட்க வேண்டும். நீங்கள் மாற்றமாக இருப்பதற்கு உறுதி எடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் மாதவன், ”நம்பிக்கையையும் பழைய இயல்பு வாழ்க்கையையும் கொண்டு வருவதற்கான நேரம் இது. தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கையை மீட்பதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகவும் இது இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 15 நாட்கள் தங்கப்போகும் அடுத்த ஹாலிடே ஸ்பாட் எங்கு இருக்கிறதோ?.. தேசிய செய்தி சேனல்கள் தமிழக பிரச்சினை முடிந்துவிட்டதாக தெரிவித்து வருகின்றன. பிரச்சினையே இப்போதுதான் ஆரம்பிக்கிறது என்பது அவற்றுக்கு தெரியவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.எல்.ஏக்களிடம் மக்கள் கேட்கவேண்டும்.
இவ்வாறு ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.
அஜித் அண்ணா மிகவும் அன்பானவர் என்று பாலிவுட் நடிகர் புகழந்துள்ளார். அவர் அளித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், `விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் அஜித் குறித்த தனது கருத்துக்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தொடக்கம் முதலே `விவேகம்' படம் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது ஒருசில தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று அஜித் குறித்து அவர் தெரிவி்த்ததாவது,
"அஜித் அண்ணா மிகவும் பணிவான மனிதன், மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதில் அவர் முழுமையான மாணிக்கம், சென்னையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சுகமாக இருப்பதை உணர்கிறேன். உங்களது அன்புக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
'விவேகம்' படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை தமிழ் தல பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்நிலையில், `விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் அஜித் குறித்த தனது கருத்துக்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தொடக்கம் முதலே `விவேகம்' படம் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது ஒருசில தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் ஓபராய் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று அஜித் குறித்து அவர் தெரிவி்த்ததாவது,
"அஜித் அண்ணா மிகவும் பணிவான மனிதன், மற்றவர்களுக்கு மதிப்பளிப்பதில் அவர் முழுமையான மாணிக்கம், சென்னையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சுகமாக இருப்பதை உணர்கிறேன். உங்களது அன்புக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
'விவேகம்' படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை தமிழ் தல பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
பிரபல இயக்குனரின் பேரன் தமிழல் இயக்குனராக அறிமுகமாகும் "யார் இவன்" படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
படகோட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரின் பேரன் தமிழல் இயக்குனராக அறிமுகமாகும் "யார் இவன்"
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் `படகோட்டி', நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் `உத்தம்புத்திரன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா "யார் இவன்" படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.
`பீமிலி கபடி ஜட்டு', `எஸ்.எம்.எஸ்', `ஷங்கரா' ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் `யார் இவன்'.
`யார் இவன்' ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர்.
ஏப்ரல் 2017 படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சுவாரசியமான ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் `படகோட்டி', நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் `உத்தம்புத்திரன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா "யார் இவன்" படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.
`பீமிலி கபடி ஜட்டு', `எஸ்.எம்.எஸ்', `ஷங்கரா' ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் `யார் இவன்'.
`யார் இவன்' ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர்.
ஏப்ரல் 2017 படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சுவாரசியமான ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் `வணங்காமுடி' படத்தில் இருந்து விலகியதாக டேனியல் பாலாஜி அறிவித்துள்ளார். அவர் விலகியதற்கான காரணம் என்னவென்பதை கீழே பார்க்கலாம்.
பிரபல இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் படம் `வணங்காமுடி'. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. `புதையல்' படத்திற்கு பிறகு 20 வருடங்களுக்குப் பிறகு செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி மீண்டும் நடிக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி உள்ளிட்ட 3 நாயகிகள் நடித்து வருகின்றனர்.
முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திலிருந்து தான் விலகியுள்ளதாக டேனியல் பாலாஜி அறிவித்துள்ளார்.
டேனியல் பாலாஜி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்து பிறகு `வணங்காமுடி'-யில் நடிக்க இருந்தநிலையில், `வணங்காமுடி' படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்கியதால் அப்பபடத்தில் நடிக்க முடியதா சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
`வணங்காமுடி` படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைக்கிறார். மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திலிருந்து தான் விலகியுள்ளதாக டேனியல் பாலாஜி அறிவித்துள்ளார்.
டேனியல் பாலாஜி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்து பிறகு `வணங்காமுடி'-யில் நடிக்க இருந்தநிலையில், `வணங்காமுடி' படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்கியதால் அப்பபடத்தில் நடிக்க முடியதா சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
`வணங்காமுடி` படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைக்கிறார். மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
"முதல்வன்'' படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.
"முதல்வன்'' படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-
"டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார்.
டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.
புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.
முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.
அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.
சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால் அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.
விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.
ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.
ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.
ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.
இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.
இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.
ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.
மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.
ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.
மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.
அர்ஜீனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.
டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.
இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-
"டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார்.
டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.
புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.
முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.
அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.
சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால் அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.
விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.
ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.
ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.
ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.
இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.
இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.
ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.
மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.
ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.
மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.
அர்ஜீனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.
டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.
இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.








