search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வால்வோ XC40 ரிசார்ஜ் வெளியீடு
    X

    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வால்வோ XC40 ரிசார்ஜ் வெளியீடு

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடலை சமீபரத்தில் அறிமுகம் செய்து இருந்தது.
    • வால்வோ XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்ட்ட வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலை கர்நாடக மாநிலத்தின் ஹோஸ்கோட் ஆலையில் இருந்து வெளியிட்டுள்ளது. முதல் XC40 ரிசார்ஜ் மாடல் அந்த ஆலையின் தலைவர் பஸ்கல் கஸ்டர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவருடன் ஆலையில் பணியாற்றும் குழுவினரும் கலந்து கொண்டனர்.

    இந்திய சந்தையில் ஜூலை 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல், இந்த மாதத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. டிசம்பர் 2022 இறுதிக்குள் 150 யூனிட்களையும் வினியோகம் செய்ய வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வால்வோ XC40 ரிசார்ஜ் முதல் யூனிட் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட்ட முதல் ஆடம்பர எஸ்யுவி மாடலாக வால்வோ XC40 ரிசார்ஜ் இருக்கிறது. இந்த மாடல் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு அருகே உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது.

    இந்த கார் 408 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும்.

    Next Story
    ×