search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஸ்கோடா கோடியக்
    X
    ஸ்கோடா கோடியக்

    2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் வெளியீட்டு விவரம்

    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் 2022 கோடியக் பேஸ்லிப்ட் மாடலின் உற்பத்தியை துவங்கி இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2022 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இந்தியாவில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் சி.பி.யு. (completely knocked down) யூனிட் வடிவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அவுரங்காபாத் ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது. இந்த காரில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

     ஸ்கோடா கோடியக்

    சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இதன் விற்பனை சில நாடுகளில் நடைபெற்று வருகிறது. எனினும், தற்போது இந்தியா வரும் பேஸ்லிப்ட் மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

    புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 
    Next Story
    ×