என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
உலகின் மிகப்பெரிய ஏரியில் சாதனை படைத்த லம்போர்கினி
Byமாலை மலர்24 May 2021 8:55 AM GMT (Updated: 24 May 2021 8:55 AM GMT)
ஐஸ் கட்டி மீது அதிவேகமாக சென்ற கார் என்ற பெருமையை லம்போர்கினி உருஸ் மாடல் படைத்துள்ளது.
ஐஸ் மீது அதிவேகமாக சென்ற கார் எனும் பெருமையை லம்போர்கினி உருஸ் பெற்றது. ரஷ்யாவில் உள்ள பைகல் எனும் ஏரியில் மார்ச் மாதம் நடைபெற்ற டேஸ் ஆப் ஸ்பீடு நிகழ்வில் இந்த சாதனையை லம்போர்கினியின் சூப்பர் எஸ்யுவி படைத்தது.
மணிக்கு 298 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற சீறி பாய்ந்த லம்போர்கினி உருஸ் மாடலை ரஷ்யாவை சேர்ந்த கார் பந்தைய வீரர் ஆண்ட்ரே லியோன்ட்யெவ் ஓட்டினார். இவர் ஏற்கனவே 18 முறை டேஸ் ஆப் ஸ்பீடு நிகழ்வில் சாதனை படைத்து இருக்கிறார். இந்த சாதனையை ரஷ்ய ஆட்டோமொபைல் பெடரேஷன் அங்கீகரித்து இருக்கிறது.
உறைந்த ஏரியின் மீது கார் ஓட்டுவது மிகவும் சவாலான காரியம் ஆகும். மேலும் இதை ஓட்டும் போது ஏரியில் மூழ்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. ஏதேனும் சிறு தவறு நடந்தாலும், கற்பனை செய்ய முடியாத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
லம்போர்கினி உருஸ் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளிலும், 200 கிலோமீட்டர் வேகத்தை 12.8 நொடிகளிலும் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 650 பிஹெச்பி திறன் கொண்ட 4.0 ட்வின் டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X