search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஜீப் மெரிடியன் ஸ்பெஷல் எடிஷன் கார்கள் இந்தியாவில் அறிமுகம்
    X

    ஜீப் மெரிடியன் ஸ்பெஷல் எடிஷன் கார்கள் இந்தியாவில் அறிமுகம்

    • ஜீப் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய காரில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
    • கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன.

    ஜீப் நிறுவனத்தின் இரண்டு ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி கார் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. மெரிடியன் X மற்றும் மெரிடியண் அப்லேண்ட் என்று அழைக்கப்படும் புதிய கார்களில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவைதவிர கார்களை வித்தியாசப்படுத்தும் ஸ்போர்ட் அப்கிரேடுகளை இரண்டு மாடல்களும் கொண்டிருக்கின்றன. புதிய ஜீப் மெரிடியன் X ஸ்பெஷல் எடிஷன் மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்கள் லிமிடெட் (O) வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் ஜீப் 4x4 செலக்-டெரைன் 4-வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

    இவைதவிர இரு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களிலும் சைடு ஸ்டெப், ஆம்பியண்ட் லைட்டிங், புதிய கால்மிதி, யு-கனெக்ட் 5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் தற்போது சில்வரி மூன் மற்றும் கேலக்ஸி புளூ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் பின்புறம் எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    ஜீப் மெரிடியன் X மற்றும் மெரிடியன் அப்லேண்ட் மாடல்களில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×