என் மலர்
கார்

மாருதி சுஸூகி கார்
வெறும் 500 ரூபாயில் கிடைக்கும்- மாருதி சுஸூகி அதிரடி அறிவிப்பு
இந்த சர்வீஸ் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி மாருதி சுஸூகியின் கார்களின் இன்ஜின்களில் தண்ணீர் தேங்குதல் அல்லது என்ஜின் செயலிழப்பு அல்லது கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோல்-டீசல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை வெறும் ரூ.500 மட்டும் செலுத்தி சரி செய்துகொள்ள முடியும்.
இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக அதிக நெரிசல், கலப்பட எரிபொருள் உள்ளிட்ட காரணங்களால் கார்களின் இன்ஜின் பழுதடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகளை குறைந்த செலவில் சரி செய்யும் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளோம்.
மாருதி சுஸூகியின் வேகன்ஆர், ஆல்டோ போன்ற கார்களின் இன்ஜின் பழுதுபார்க்க, வாடிக்கையாளர்கள் ரூ.500 மட்டும் செலுத்தினால் போதும்.
இவ்வாறு கூறியுள்ளது.
இந்த சர்வீஸ் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story