என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
அப்டேட் மூலம் புதிய வசதிகளை பெறும் டாடா டியாகோ
Byமாலை மலர்14 Oct 2020 9:06 AM GMT (Updated: 14 Oct 2020 9:06 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடல் காருக்கு புதிய அம்சங்களை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேட்ச்பேக் மாடலை விரைவில் அப்கிரேடு செய்ய இருக்கிறது. அந்த வகையில் டியாகோ எக்ஸ்டி வேரியண்ட்டில் ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் போன் கண்ட்ரோல்கள் வழங்கப்பட இருக்கின்றன.
மேம்பட்ட ஹேட்ச்பேக் வேரியண்ட் விரைவில் விற்பனை மையங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது அப்டேட் கொண்ட மாடலின் பிரவுச்சரை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு உள்ளது.
தற்சமயம் டாடா டியாகோ மாடல்- எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட்ஏ, எக்ஸ்இசட்ஏ பிளஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் எக்ஸ்டி வேரியண்ட் என்ட்ரி லெவல் மாடலுக்கு அடுத்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X