என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய காருக்கான முன்பதிவுகளை துவங்கிய ஹோண்டா
Byமாலை மலர்7 March 2020 10:07 AM GMT (Updated: 7 March 2020 10:07 AM GMT)
ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தனது புதிய டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் கார் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.
ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் புதிய டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. முதல் முறையாக அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் புதிய காரில் பி.எஸ். 6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. மாடலில் முன்புறம் மேம்பட்ட பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங், சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு பார்க்க ஹனிகொம்ப் மெஷ் போன்று காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், புதிதாக எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டி.ஆர்.எல்.களும் வழங்கப்பட்டுள்ளன.
காரின் பின்புற மாற்றங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஹோண்டா டபுள்யூ.ஆர்.வி. ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய அலாய் வீல்களும் வழங்கப்படலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X