search icon
என் மலர்tooltip icon

    பைக்

    பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டர்
    X
    பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டர்

    வட சென்னை அருகே தீப்பிடித்து எரிந்த ப்யூர் இவி மின்சார ஸ்கூட்டர்- ஒரே வாரத்தில் 3வது விபத்து

    கடந்த வாரம் பூனே சாலையோரத்தில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி வெளியானது. அதேபோல வேலூர் அருகே ஒக்கினவா மின் பைக் ஒன்று தீப்பிடித்து எரிந்து வேலூரை சேர்ந்த தந்தையும், மகளும் இறந்தனர்.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதை தொடர்ந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கின்றனர். பெரும் நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர், கார்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

    கடந்த வாரம் பூனே சாலையோரத்தில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி வெளியானது. அதேபோல வேலூர் அருகே ஒக்கினவா மின் பைக் ஒன்று தீப்பிடித்து எரிந்து வேலூரை சேர்ந்த தந்தையும், மகளும் இறந்தனர்.

     இந்நிலையில் தற்போது வட சென்னை அருகே  மாத்தூர் டோல் பிளாசா அருகில் ப்யூர் இவி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ப்யூர் இவி வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். வாகன தயாரிப்பில் பலதரப்பட்ட சோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின்பு தான் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. 

    பேட்டரி தீப்பிடிக்காமல் இருப்பதற்கான அம்சங்களும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. முழுதாக விசாரிக்கப்பட்டபின் இந்த விபத்துக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


    Next Story
    ×