search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பெனலி மோட்டார்சைக்கிள்
    X
    பெனலி மோட்டார்சைக்கிள்

    மூன்று புது மாடல்களை அறிமுகம் செய்யும் பெனலி

    பெனலி நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான பெனலி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மூன்று புது மோட்டார்சைக்கிள் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர இந்திய சந்தையில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பெனலி திட்டமிட்டுள்ளது.

     பெனலி மோட்டார்சைக்கிள்

    புது மாடல்களில் பெனலி 502C பவர் குரூயிசர் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெனலி நிறுவனம் - TRK502, TRK502X, லியோன்சினோ, இம்பீரியல் 400 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. பெனலி இந்தியா எதிர்கால திட்டம் குறித்து அந்நிறுவன வியாபார பிரிவு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபக் கூறும் போது,
     
    "இந்தியாவில் 250 முதல் 500 சிசி பிரிவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன் 30 விற்பனை மையங்கள் இயங்கி வந்தன. நாட்டில் நிலைமை சீராகும் பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு புது விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்." என தெரிவித்தார்.
    Next Story
    ×