என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஓசூரில் உள்ள புது ஆலையில் உற்பத்தியை துவங்கிய ஏத்தர் எனர்ஜி
Byமாலை மலர்4 Feb 2021 7:39 AM GMT (Updated: 4 Feb 2021 7:39 AM GMT)
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் கட்டமைத்து இருக்கும் புதிய ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி ஓசூரில் கட்டமைத்த புதிய ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது. இந்த ஆலையில் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
புது ஆலையில் உற்பத்தி துவங்கி இருப்பதால், ஏத்தர் எனர்ஜி இந்தியாவில் மேலும் சில பகுதிகளில் விற்பனையை அதிகப்படுத்த முடியும். தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வருடம் கழித்து ஓசூர் ஆலையில் உற்பத்தி பணிகள் துவங்கி உள்ளன.
ஓசூரில் உள்ள புதிய உற்பத்தி ஆலை 4 லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக வேலைவாய்ப்புகளை இந்த ஆலை உருவாக்கும் என ஏத்தர் எனர்ஜி தெரிவித்து இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X