என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சியட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
Byமாலை மலர்20 Jun 2020 5:30 AM GMT (Updated: 20 Jun 2020 5:30 AM GMT)
சியட் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஸ்பெயின் நாட்டு நிறுவனமான சியட் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி மாடலை அறிமுகம் செய்துள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்குவதாக சியட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து பார்சிலோனா ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ வொர்ல்டு காங்கிரஸ் விழாவில் இஸ்கூட்டர் மாடலின் கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. புதிய இஸ்கூட்டர் 125 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி பற்றி இதுவரை எவ்வித தொழில்நுட்ப விவரங்களும் வழங்கப்படவில்லை. எனினும், இது மிக எளிதில் கழற்றக்கூடிய யூனிட் ஆகும். பேட்டரி வைக்கும் இடம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இருக்கையின் கீழ் அதிக இடவசதி கிடைக்கிறது. இதில் ஹெல்மெட் ஒன்றை வைத்துக் கொள்ள முடியும்.
இ-ஸ்கூட்டர் 125 மாடலில் உள்ள மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வேகத்திலும், மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X