search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ரூ. 10 லட்சம் விலையில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் கார்
    X

    ரூ. 10 லட்சம் விலையில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் கார்

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் விலை மற்றும் இந்திய வெளியீடு பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    பிரென்ச் நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் சிட்ரோயன் நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் மாடலாக C3 ஹேக்பேக்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது.

    தற்போது சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சிட்ரோயன் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் e-C3 அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை சிட்ரோயனின் தாய் நிறுவனமான ஸ்டெலாண்டிஸ் தலைமை செயல் அதிகாரி கார்லஸ் டவெரிஸ் தெரிவித்து இருக்கிறார்.

    புதிய எலெக்ட்ரிக் காரின் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் தற்போது அறிவிக்கப்படவில்லை. எனினும், 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வை தொடர்ந்து இந்த காரின் வெளியீடு நடைபெறும் என கூறப்படுகிறது. வெளியீட்டு விவரத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை மேலும் குறைவாக நிர்ணயம் செய்வதற்கான விலை வடிவத்தை உருவாக்க ஸ்டெலாண்டிஸ் கடுமையாக உழைத்து வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

    குறைந்த விலை, வாகனத்தின் தரம் என பல்வேறு இலக்குகளை எவ்வளவு வேகமாக அடைகிறோம் என்பதை பொருத்து இந்தியாவில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்வது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலையை குறைப்பது மிகப் பெரிய சவால் என அவர் மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×