என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
நாடு முழுக்க புதிய விற்பனை மையங்களை திறக்கும் ஸ்கோடா
Byமாலை மலர்11 July 2021 3:32 AM GMT (Updated: 11 July 2021 3:32 AM GMT)
ஸ்கோடா நிறுவனம் நாடு முழுக்க புதிய விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நாடு முழுக்க சுமார் 30 விற்பனை மையங்களை அடுத்த ஆறு மாதங்களில் திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் 14 விற்பனை மையங்களை திறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் 16 விற்பனை மையங்களை படிப்படியாக திறக்க இருக்கிறது.
இதுதவிர ஸ்கோடா நிறுவனம் விரைவில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கோடியக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் 2 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து புதிய மிட்-சைஸ் செடான் மாடலையும் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X