என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பெங்களூரு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் டொயோட்டா
Byமாலை மலர்15 Jun 2021 9:23 AM GMT (Updated: 15 Jun 2021 9:23 AM GMT)
டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி ஆலையில் ஒவ்வொரு நாளும் 50 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது பிடாடி உற்பத்தி ஆலையின் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்திக்கென டொயோட்டா அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் நவம்பர் மாத வாக்கில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
இதற்கென டொயோட்டா நிறுவனம் ரூ. 12 கோடி முதலீடு செய்து இருக்கிறது. இந்த ஆலை ஒவ்வொரு நாளும் 50 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் ராம்நகரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X