என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய ஸ்கோடா ரேபிட் இந்த பெயரில் அறிமுகமாகும் என தகவல்
Byமாலை மலர்16 Dec 2020 11:20 AM GMT (Updated: 16 Dec 2020 11:20 AM GMT)
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ரேபிட் மாடல் இந்த பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் ஸ்லேவியா எனும் பெயரை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை கோரியுள்ளது. இது ஸ்கோடா நிறுவனத்தின் புதிய தலைமுறை ரேபிட் மாடலுக்கு சூட்டப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் மாடல் 2021 ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இதே மாடல் ரஷ்யாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் மாடல் MQB A0 பிளாட்பார்மில் உருவாகி வருகிறது.
இந்த மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது 114 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த காரின் வெளிப்புறம் பட்டர்பிளை கிரில், ஏரோ வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், டைமன்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஸ்கோடா ரேபிட் மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. புதிய ரேபிட் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் நான்காவது தலைமுறை ஆக்டேவியா மாடலையும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X