என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
கார் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
Byமாலை மலர்3 Nov 2020 11:35 AM GMT (Updated: 3 Nov 2020 11:35 AM GMT)
புதிதாக கார் வாங்கும் முன் அனைவரும் கவனிக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
புதிதாக கார் வாங்க வேண்டும் என்பது பலரின் ஆசைகளில் ஒன்றாக நிச்சயம் இருக்கும். அனைவருக்கும் தான் வாங்கும் முதல் கார் மிகவும் விசேஷமாக இருக்க வேண்டும் என்றே நினைப்பர்.
கார் வாங்கும் முன் அதன் விலை, டிரைவிங் ஸ்டைல், பராமரிப்பு விஷயம் என பலவற்றை கருத்தில் கொண்டு அவரவர் விருப்பப்படி ஒரு திட்டத்துடன் காரை தேர்வு செய்வர்.
அந்த வகையில் கார் வாங்கும்போது பலர் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் கார் வாங்கும்போது, அதன் உதிரிப் பாகங்கள் விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்கள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார்களுக்கு உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும். அதிகமாக விற்பனையாகும் கார்களை கணக்கில் கொண்டுதான் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
‘நான் தான் இந்த ஊரிலேயே காரைப் பயன்படுத்துகிறேன்’ என்று அறிமுகமில்லாத காரை பயன்படுத்தும்போது, பழுது ஏற்பட்டு அல்லது தேய்மானம் அடைந்து, உதிரி பாகங்களை மாற்றும் நிலை வந்தால் அவை கிடைப்பது கடினம். பராமரிப்பு செலவும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X