என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
ஜாவா ரோட்சைடு அசிஸ்டன்ஸ் திட்டம் இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்29 July 2020 10:58 AM GMT (Updated: 29 July 2020 10:58 AM GMT)
ஜாவா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரோட்சைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ. 1050 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் ஜாவா நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நாடு முழுக்க 950 நகரங்களில் 24x7 அடிப்படையில், அதிகபட்சம் 100 கிலோமீட்டர்களுக்கு வழங்கப்படுகிறது.
ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தில் 100 கிலோமீட்டர்களுக்கு இலவச டோயிங் வசதி, ரோடுரைடு ரிப்பேர், பன்ச்சர் ரிப்பேர், கூடுதல் எரிபொருள், சாவி தொலைந்தால் மீட்பது, மருத்துவ அவசர நிலை உள்ளிட்டவைகளுக்கு உதவி வழங்கப்படும் என ஜாவா தெரிவித்து இருக்கிறது.
புதிய ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்த்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்படவில்லை. ஜாவா வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களுக்கு ரோடுசைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் தேர்வு செய்து கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X