என் மலர்
- குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் துணிகரம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிரசு ஊர்வலம் கோவிலில் அம்மனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பெண் பக்தர்களிடம் நகை பறித்துள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரேவதி, ஜெயந்தி, சீதா என்ற 3 பெண்களிடம் 15 சவரன் நகைகளை பறித்து சென்று விட்டனர்.
இந்த திருவிழாவில் மேலும் பெண்களிடம் நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு உரிய புகார்கள் வரவில்லை என கூறப்படுகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அணிந்து வரக்கூடாது என்று அறிவுறுத்தி வந்தனர்.
தங்கள் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இருப்பினும் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







