என் மலர்tooltip icon

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் 28.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் தூளாகும்
    X

    இன்றைய ராசிபலன் 28.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் தூளாகும்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன் சுமை குறையப் புதிய வழிபிறக்கும்.

    ரிஷபம்

    வளர்ச்சி கூடும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    மிதுனம்

    நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    சிம்மம்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நண்பர்களால் கையிருப்பு கரையக்கூடிய வாய்ப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கன்னி

    துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். வரன்கள் முடிவாகும்.

    துலாம்

    உதவிகள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    விருச்சிகம்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

    தனுசு

    யோகமான நாள். பழகிய நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர் பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    மகரம்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    மீனம்

    நல்லவர்களின் சந்திப்பு கிடைத்து நலம் காணும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். திருமண முயற்சி வெற்றி தரும்.

    Next Story
    ×