என் மலர்tooltip icon

    ராசிபலன்

    Today Rasipalan- இன்றைய ராசிபலன் 13.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்
    X

    Today Rasipalan- இன்றைய ராசிபலன் 13.10.2025: இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    ரிஷபம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் தொடர்பான முக்கியப் புள்ளிகளை சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். உறவினர் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும்.

    சிம்மம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது.

    கன்னி

    வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    துலாம்

    இடம் சம்பந்தமான பிரச்சனைகள் சுமுகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.

    விருச்சிகம்

    திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும் நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பிச் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரிப்பு குறையும்.

    தனுசு

    யோகமான நாள். நீங்கள் செய்த உதவிக்கு பதில் உதவி கிடைக்கும். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    மகரம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    கும்பம்

    எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    Next Story
    ×