Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 07.08.2025

இன்றைய ராசிபலன்12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 07.08.2025
Published on

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும்.

ரிஷபம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்களைத் தவிர்க்கவும். உடல்நலனுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். சகோதர வழியில் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

கடகம்

குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

சிம்மம்

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.

கன்னி

நிதிநிலை உயரும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும்.

துலாம்

காலை நேரம் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் உதவியோடு தொழில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

விருச்சிகம்

நன்மைகள் நடைபெறும் நாள். பாசத்தோடு பழகியவர்கள் நேசக்கரம் நீட்டுவர். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.

தனுசு

செல்வாக்கு மேலோங்கும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைதூரப் பயணங்கள் உறுதியாகும்.

மகரம்

வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பாசம்மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வாகனமாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

கும்பம்

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிம்மதிக்காக வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

மீனம்

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com