என் மலர்
ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 17.10.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு பூமி வாங்கும் யோகம் உண்டு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நினைத்தது நிறைவேறும் நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளை செய்துமுடிக்க சற்று தாமதம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.
மிதுனம்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்பொன காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
கடகம்
சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். செயல்பாட்டில் அவசரம் காட்ட வேண்டாம். பூமி வாங்கும் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது. உற னர்கள் பகை உருவாகலாம்.
கன்னி
ஒற்றுமை பலப்படும் நாள். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.
துலாம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.
விருச்சிகம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். புகழ் கூடும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வருமானம் உயரும்.
தனுசு
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.
மகரம்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வரவைவிடச் செலவு கூடும்.
கும்பம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
மீனம்
வரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.






