டென்னிஸ்
துபாய் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி
- துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹசே ஜோடி-இங்கிலாந்தின் ஜேமி முர்ரே, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.