தொழில்நுட்பம்
பர்ஸ் போல் மடிக்கும் ஸ்மார்ட்போனுக்கு காப்புரிமை பெற்றது மைக்ரோசாப்ட்
பையில் மடித்து வைக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கென அந்நிறுவனம் காப்புரிமைகளை சமீபத்தில் பெற்றுள்ளது.
நியூ யார்க்:
மைக்ரோசாப்ட் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் அந்நிறுவனம் வளையும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க இருப்பது தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காப்புரிமையின் கீழ் உருவாக இருக்கும் புதிய சாதனம் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் என இரண்டு சாதனங்களின் பயன்பாடுகளை ஒற்றை சாதனத்திலேயே வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய வளையும் சாதனமானது லெனோவோவின் யோகா டேப்லெட் சாதனத்தில் வழங்கப்படுவதை போன்ற டென்ட் மோட் வழங்கப்பட இருக்கிறது. சாதனத்தை வெவ்வேறு திரை அளவுகளில் பயன்படுத்த இரண்டிற்கும் மேற்பட்ட மோட்கள் வழங்கப்பட இருக்கிறது. இது பார்க்க மைக்ரோசாப்ட் கொரியர் கான்செப்ட் போன்றே காட்சியளிக்கும் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சாதனம் தவிர மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ டேப்லெட் சாதனத்தை இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 5 என அழைக்கப்படும் இந்த சாதனம் 2 இன் 1 அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே, காந்த சக்தி கொண்ட ஸ்டைலஸ், பென்டக்ரான் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 5 உடன் சர்ஃபேஸ் பென் ஒன்றும் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் காந்தம் கொண்ட சார்ஜிங் அமைப்பு வழங்கப்படவுள்ளது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையில் கவனம் செலுத்தும் என்பதை அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி தெரிவித்திருந்தார்.