தொழில்நுட்பம்

பிரம்மாண்டமாக உருவாகும் பிக்சல் சாதனம்: முழு தகவல்கள்

Published On 2017-03-16 12:17 GMT   |   Update On 2017-03-16 12:17 GMT
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் இந்த ஆண்டு புதிய சாதனம் ஒன்று வெளியாக இருக்கிறது. அதன்படி பெரிய திரை கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட பிக்சல் மற்றும் பிக்சல் XL ஸ்மார்ட்போன்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மஸ்கீ மற்றும் வேலீ என்ற பெயரில் இவை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் கூகுள் நிறுவனம் மூன்றாவது சாதனம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கூகுள் உருவாக்கி வரும் மூன்றாவது சாதனம் தய்மீன் என்ற பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தய்மீன் என்பது பெரிதாக இருக்கும் மீன் ஆகும். இதனால் கூகுள் உருவாக்கி வரும் தய்மீன் ஸ்மார்ட்போனில் பெரிய திரை வழங்கப்படும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. 

பெரும்பாலும் இது டேப்லெட் சாதனமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சாதனத்திற்கு பிக்சல் பிரான்டிங் வழங்கப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை பெரிய கூகுள் சாதனம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 

முன்னதாக வெளியான தகவல்களில் பிக்சல் 2017 சாதனங்களின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அதிகம் மேம்படுத்தப்படலாம் என கூறப்பட்டது. இத்துடன் இவற்றில் தூசு மற்றும் தண்ணீர் மூலம் பாதிக்காத படி வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News