தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 5 லேப்டாப் விரைவில் வெளியாகும் என தகவல்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தன் புதிய சர்ஃபேஸ் ப்ரோ ஹைப்ரிட் 5 லேப்டாப் விரைவில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சான்பிரான்சிஸ்கோ:
மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் ப்ரோ ஹைப்ரிட் 5 லேப்டாப் சாதனத்தை இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி புதிய சர்ஃபேஸ் ப்ரோ 5 சாதனத்தில் 4K அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட மாக்னெடிக் ஸ்டைலஸ் (காந்தம் சார்ந்த பேனா) உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முந்தைய சர்ஃபேஸ் ப்ரோ சாதனங்களை போன்றே புதிய சர்ஃபேஸ் ப்ரோ 5 லேப்டாப் பெகட்ரான் மூலம் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் புதிய சாதனத்தில் குவான்டா கம்ப்யூட்டரை கொண்டு வர மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்சமயம் வரை இது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
சர்ஃபேஸ் ப்ரோவுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சர்ஃபேஸ் ஸ்டூடியோ AIO உள்ளிட்டவை பெகட்ரானின் செயல்திறன் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை கேமிங் பிரியர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் பிரத்தியேகமாக கேமிங் மோட் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ட்விட்டரில் வெளியான தகவல்களில் 'gamemode.dll' ஃபைல் கேமிங் மோட் சார்ந்த தகவல்களை உறுதி செய்துள்ளது. எனினும் இந்த அம்சம் தற்சமயம் வரை தயாரிப்பு பணிகளில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வாடிக்கையாளர்கள் சிபியு பயன்பாடுகளை கேமிற்கு ஏற்றவாரு மாற்றுவதோடு, கிராஃபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களையும் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேமிங் மோட் எக்ஸ்பாக்ஸ் ஒன் சாதனத்தில் வழங்கப்படுவதை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது.