வழிபாடு

திருப்பதியில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

Published On 2025-09-10 10:18 IST   |   Update On 2025-09-10 10:18:00 IST
  • நேற்று முன்தினம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
  • திருப்பதியில் நேற்று 70, 828 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் நடை சாத்தப்பட்டது. இதனால் குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். சந்திர கிரகணம் முடிந்து கோவில் திறக்கப்பட்டதால் நேற்று முன்தினம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

திருப்பதியில் நேற்று 70, 828 பேர் தரிசனம் செய்தனர். 26,296 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News