வழிபாடு

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2025-09-04 15:50 IST   |   Update On 2025-09-04 15:50:00 IST
  • விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.

புதுவை காந்திவீதியில் சின்னமணிக் கூண்டு அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் (வியாழக்கிழமை) நடைபெற்றது.

முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி (திங்கட்கிழமை) விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்ற வந்தன. இன்று காலை 5 மணிக்கு சாமிக்கு ரக்ஷாபந்தனம் மற்றும் தேவதா பூர்ணா ஹுதி மற்றும் தத்வார்ச்சனையும், 8 மணிக்கு தீபாராதனை மற்றும் கலச புறப்பாடும் நடந்தது.

9 மணிக்கு கோவிலில் அனைத்து விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவகுமார், புதுவை பா.ஜனதா நகர மாவட்ட தலைவர் சக்தி.கிருஷ்ணராஜ், விஷகா ஜீவல்லரி உரிமையாளர் ஆனந்த், நியூ மெடிக்கல் சென்டர் செயல் இயக்குனர் அர்ஜூன் சுந்தரம், இயக்குனர் தாயுமான சுந்தரம், நிர்வாக இயக்குனர் நளினி சுந்தரம், அட்லாண்டா டிராவல்ஸ் உரிமையாளர் பிரவீன், என்.பி. ஆனந்தா நகை மாளிகை ஸ்தாபகர் பெருமாள் பிள்ளை உரிமையாளர் நாராயணன், என்.பி. ராஜராம் ஜூவல்லர் ஸ்தாபகர் பெருமாள் யாதவ், செல்வம் பேக்கரி மணிகண்டன் மற்றும் வியாபார பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.

Tags:    

Similar News