2026 பங்குனி மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்
- மகர ராசியினரே பொதுவாக ராசியையோ ராசி அதிபதியையோ எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மிக நல்லது.
- முதலீட்டாளர்கள் தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
நியாயவாதியான தனுசு ராசியினரே
ராசி அதிபதி குரு வக்க நிவர்த்தி அடைவதால் இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.மனதில் தெம்பு , தைரியம் ஏற்படும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. நோய்கள், எதிரிகள் தொல்லைகளை தீரப்போகிறது. அடமான நகைகள் மற்றும் சொத்துக்களை மீட்கும் சந்தர்ப்பம் உருவாகும்.வாழ்க்கை, தொழில் முன்னேற்றத்திற்கு புதிய கடன் கிடைக்கும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பையை தூக்கிக் கொண்டு கோவில் குலம் என்று சுற்ற ஆரம்பித்து விடுவீர்கள். ஆன்மீக சொற்பொழிவு, பட்டி மன்றங்களில் கலந்து கொள்வீர்கள். தான தர்மங்கள் செய்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் மிகும். தர்ம ஸ்தாபனங்கள் நிர்ணயம் செய்வதில் ஆர்வம் பிறக்கும். நதிகளில், கடல்களில் புனித நீராடல் செய்து பெரும் பாக்கிய பலன்களை அதிகரிப்பீர்கள். மகான்களை தரிசிப்பது, சித்தர் ஜீவ சமாதிகளை போன்ற புண்ணிய வாய்ப்புகள் தேடி வரும். புண்ணிய ஸ்தலங்களை தரிசித்து மனம் ஆனந்தம் அடையும்.
சொத்து, வியாபாரத்தை பிரித்து பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு நான் ஏன் பிறந்தேன்? .என் பிறப்பின் நோக்கம் என்ன? என் முன்னோர்கள் எனக்கு பாவம் சேர்த்துச் சென்றனரா? புண்ணியம் சேர்த்தவர்களா? என் சந்ததிகளை முன்னோர்களின் பாவத்திலிருந்து காப்பாற்ற முடியுமா? போன்ற கேள்விக்கு விடை காண முயல்வீர்கள். குல தெய்வம் , பூர்வீகம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தந்தையின் உடல் நலம் சிறக்கும். ஆயுள் பலம் அதிகரிக்கும். நோயின் தன்மை புரியும். பூர்வீக தொழிலால் மிகப் பெரிய கெளரவம் கிடைக்கும்.
சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள். மாணவ, மாணவிகள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வார்கள். சிலர் மதம் மாறுவார்கள். இல் வாழ்க்கையில் விருப்பக் குறைவு ஏற்படும். தூக்கமின்மை இருக்கும்.ஆன்மீக நாட்டம் கூடும். திருமணத் தடை அகலும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடைபெறும். வசதியான நல்ல வாழ்க்கைத் துணை.அமையும். மறுமண யோகம் உள்ளது.கண், கண் புரை தொடர்பான நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை பலன் தரும். எதிரிகள் தொல்லை இருந்தாலும் பாதிப்பு எதிரிக்கே ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தையுடன் நல்ல புரிதல் ஏற்படும். பல வருடமாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். அந்நிய தேசத்தில் வாழ விருப்பம் அதிகரிக்கும்.
குருமங்கள யோகம்
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் உங்களின் ராசியின் அதிபதியான குரு பகவானை 5,12ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் பெருகும் வருடம். பல வருடங்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு உருவாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை கூடும். வாக்கால் வருமானம் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும்.தாய் தந்தையின் பிறந்த குலத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முயல்வீர்கள். வாகனம், நகைகள், விதவிதமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள்.நிலம் விற்றல் , வாங்குதல் போன்ற பணிகள் சிறு தடை தாமதத்துடன் நடக்கும். நிலம் தோட்டம் வாங்கி விவசாயத்தில் புதுமையை புகுத்தும் எண்ணம் மிகும். விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு தேடி வரும். பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.
பொருளாதாரம்
பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். எதிர்பாரத தனவரவினால் ஏற்படும் மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும்.விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். வீடு, வாகனம் ஆடம்பர பொருள் சேரும். இன்சூரன்ஸ், ஏலச் சீட்டு, வங்கி டெபாசிட் முதிர்வு தொகை கைக்கு வரும்.பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். அநாவசிய ஆடம்பர செலவு செய்விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள்.
முதலீட்டாளர்கள்
தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.புதிய தொழில் ஒப்பந்தம் வந்து கொண்டே இருக்கும்.சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.பெரிய தொகையை கடன் பெற்று அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நாளை வரப் போகும் வருமானத்திற்குரிய செலவு தொகை இன்றே செலவாகிவிடும். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது.தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். தொழில் கூட்டாளிகளால் அவதி ஏற்படும்.புதிய தொழில் கூட்டாளிகளை சேர்க்க கூடாது. கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.மன சஞ்சலம் மிகுயாக இருக்கும். மற்றபடி சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். மன திருப்தி கிடைக்கும். மேலதிகாரிளிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். புதிய வேலைக்கு முயற்சி பலன் தரும் நல்ல வேலை கிடைக்கும். அலுவ லகத்தில் உங்களுக்கு தனி மதிப்பு மரியாதை உயரும்.
அரசியல்வாதிகள்
தசாபுத்தி சாதகமற்ற அரசியல் வாதிகள் களத்தில் இறங்கும் முன்பு சுய ஜாதகத்தை சரிபார்க்க வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு எதிரிகளை வெல்ல பலம் பெற வேண்டும். ஒரு சிலருக்கு உஷ்ணம் தொடர்பான நோயால் குறுகிய கால பாதிப்பு இருக்கும். இது பொற்காலம். எனினும் கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிகமாக போராட நேரும். அசட்டுதனமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் நாளில் வருந்தும் நிலை ஏற்படும்.
பெண்கள்
பெண்களுக்கு மிக சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும்.தந்தை வர்க்கத்தால் பல நன்மைகள் ஏற்படும்.விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே சுமூகமான உறவு நீடிக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும்.எதிர்காலத் தேவைக்கான திட்டமிடுதல் சாதகமாகும்.நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது. பொன், பொருள் சேரும்.உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலம்.
செவ்வாய் சனி சேர்க்கை
ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 5,12ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்கள். எதிர்காலத்தை பற்றிய பயஉணர்வு மிகுதியாகும்.சிலர் பரிகாரம் என்ற மூட நம்பிக்கையில் ஈடுபடுவார்கள். ஓடி ஓடி ஒளிந்தாலும் பிரச்சனை தேடித்தேடி வரும். தடை தாமதங்களை அதிகம் சந்திக்கும் காலம். கர்ம வினை அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தெரியும் .ஆயுள் பலம் உண்டு.வேற்று மதத்தினர் அல்லது புரியாத பாஷை அதிகம் பேசும் இடத்தில் குடியிருக்கும் நிலை ஏற்படும். மூத்த சகோதரர் உங்களுக்கு விட்டு கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஒப்புதலுடன் பாகப்பிரிவினை நடக்கும். அவர்கள் மூலம் லாபம், சொத்துக்கள் கிடைக்கலாம்.வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால முயற்சிகள் வெற்றி தரும். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி இல்லாதவர்களுக்கு புனர் பூ தோஷம் ஏற்பட்டு ஜான் ஏறினால் முழம் சறுக்கும். மனத்தில் வெறுமை குடிபுகும். இது என்ன வாழ்க்கை என சந்யாநிசியாக போகி விடலாம் என்ற எண்ணம் ஏற்படும். நன்றி கெட்ட குடும்ப உறவுகளை நினைத்து மனம் வெதும்பும்.
பரிகாரம்
உடல் ஊனமுற்றோருக்கு கருப்பு கம்பளி தானம் வழங்க தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகி நல்ல லாபம் கிடைக்கும்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மகர ராசியினரே
பொதுவாக ராசியையோ ராசி அதிபதியையோ எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மிக நல்லது.இந்த வகையில் பங்குனி மாதம் முழுவதும் ராசிக்கு எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. இது மகர ராசிக்கு திறமையை மெருகேற்றி கொடுக்கும் அமைப்பாகும்.கோட்ச்சார சந்திரன் மட்டும் ராசியை கடப்பார் அல்லது பார்ப்பார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும்.விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அலைச்சல் மிகுந்த பயணங்கள், பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு சிறிய தடை தாமதங்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் உபாதைகள் இருந்தால் உரிய சிகிச்சையை பெற வேண்டும்.மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.வாடிக்கையாளர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும்.
பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீர்க்க முயற்சிப்பீர்கள்.நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகலாம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் பேரன் பேத்தி எடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்குதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். நண்பர்கள் மூலமாக வீண் அலைச்சலும் காரியத்தடையும் உண்டாகும். தொழில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும். திருமணத் தடை அகலும். தடைபட்ட சுப காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.
இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற காரணங்களால் தந்தை மகன் உறவிலும் விரிசல் ஏற்பட்டு குடும்பம் பிரியும். தம்பதிகளின் உறவில் அந்நோன்யம் நீடிக்கும். அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும். அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பல மடங்கு ஆதாயம் தரும். உயில் எழுதுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். சொத்துக்களின் விற்பனை சாதகமாகும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும்.கூட்டுத் தொழில் புரிபவர்கள் பொறுமை, நிதானத்துடன் இருக்க வேண்டும். தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.மாணவர்கள் நல்ல நண்பர்களுடம் நட்பு வைக்க வேண்டும். கூடா நட்பு கேடில் முடிந்து கெட்ட பெயர் எடுத்து தரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
குருமங்கள யோகம்
மகர ராசிக்கு 3 ,12 ஆம் அதிபதியான குரு பகவானை 4,11ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையினால் பார்ப்பது குருமங்கள யோகமாகும்.சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். சொத்து வாங்குதல் விற்றல் போன்றவற்றின் மூலம் அபரிமிதமான லாபம் கிடைக்கும் ரியல் எஸ்டேட்,கட்டுமான துறையில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம் உயரும்.புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.வெளிநாட்டு வேலைக்கான முயற்சி சித்திக்கும்.சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் அதிகமாகும்.தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து யோகா, மெடிடேசன் , உடற்பயிற்சி, தியானம் போன்ற விஷயங்களில் மனதை செலுத்த வேண்டும்.
பொருளாதாரம்
தேவைக்கு மிகுதியாகவே வருமானம் கிடைக்கும்.கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏதாவது ஒரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள்.வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.கால்நடை வளர்ப்பில் ஆர்வம் மிகும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டை விரிவுபடுத்தவும் பராமரிப்பு செலவு மிகும். ஒரு சிலர் வசதி அதிகமான நல்லவாடகை வீட்டிற்கு செல்ல நேரும்.விவசாயிகளுக்கு கால் நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலாலும் வருமானம் அதிகரிக்கும் காலம்.சிலருக்கு வீடு வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும்.அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் சூழல் உருவாகும்.திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாகும். தேவையில்லாத சிந்தனையில் மனதை சிதற விடக் கூடாது.எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைத்து செயல்பட்டு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இருந்த நீங்கள் உலக மாற்றத்தை கண்டு புதிய வழிகளை தேடி சிந்திப்பீர்கள். இள வயது மகர ராசி வாலிபர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி பெற்றோர், உற்றார் உறவினரிடம் கெட்ட பெயர் எடுப்பீர்கள். சிறிய செயலுக்கு அதிக முயற்சியும் உழைப்பும் தேவைப்படும்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சனிபகவானுடன் 4,11ம் அதிபதியான செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.முகத்தில் கவலை, துக்கம் நிறைந்து இருக்கும். தோற்றப் பொலிவு குறையும். முடி நரைக்கும்.முகத்தில் கரும்புள்ளிகள் தழும்புகள் தோன்றும்.மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். எனக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பீர்கள். அதிர்ஷ்டம் என்னை தேடி வருமா? என அதிர்ஷ்டத்தை தேடி காலம் தள்ளுவீர்கள். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத முன்னோர் சொத்துக்காக இருக்கும் பொன், பொருளையும் ஏமாந்து பிறருக்கு கொடுத்து பின்னர் அதற்காக வருந்துவீர்கள்.உடல் சோர்வு, கை, கால், மூட்டு வலி மிகுதியாகும்.ஜனன கால ஜாதகத்தில் உங்களின் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது.தவறான சிந்தனையில் மனதை அலை பாய விடாமல் இருந்தால் மட்டுமே கவுரவத்தை கட்டிக் காக்க முடியும். வாழ்க்கை என்பது கண்ணாடி பாத்திரம் அதை கவனமாக கையாள வேண்டும்.
பரிகாரம்
பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது நல்லது.
உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினரே
ராசியில் உள்ள ராகு பகவானுக்கு வக்ர நிவர்த்தி பெற்ற குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. குருபகவானின் அருட் கருணையால் அனைத்து செயல்களும் சாதகமாக முடியும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கூடும். விரும்பியதை மன பலத்தால் அடைவீர்கள். தடைகள் அகன்று எதிர்பார்த்த அனைத்து சுப பலன்களையும் அடையமுடியும். நல்ல செய்திகள் தேடி வரப்போகிறது. முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற தடைபட்ட சுப நிகழ்வுகள் நடக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது.
பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மனதளவில் உற்சாகமாகவும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். மனத் தடுமாற்றம் பய உணர்வு அகலும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.புதிய சொத்துக்கள் வாகனங்கள் சேரும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். தாயின் மூலம் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளின் மனக்கவலை அகலும். கடன் தொல்லைக் கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் தொடர்பான இழுபறியான விசயங்கள் சித்திக்கும். அரசின் ஆதரவு மானியம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய செயல்களில் நன்மை தீமை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. போதிய பண வரவு இருந்தாலும் எதிர்பாராத செலவும் இருக்கும். அனைத்து துறையினருக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு, திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பங்குச் சந்தை ஆதாயம் பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். பூர்வீகச் சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம் இது. பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர் பாலினத்தவரிடம் தேவையறிந்து பழகவும். காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கில் முடியும்.வேற்று மதத்தவரால் இன்னல்கள் ஏற்படும். சிலர் மதம் மாறவும் செய்யலாம் . காதல் கலப்பு திருமணம் நடைபெறும். வெளி நபர்களால் குடும்பத்தில் குழப்பம் வரலாம் என்பதால் மனதை கட்டுப்படுத்தி தெரியாதவர்களிடம் பழகுவதை தவிர்த்தல் நலம்.
குருமங்கள யோகம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினை 3,10ம் அதிபதியான செவ்வாய் பார்ப்பது குருமங்கள யோகமாகும்.மன சஞ்சல மிகுதியால் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்த மனம் கட்டுப்படும். எவை நல்லவை, எவை தீயவை என மனதால் பகுக்க முடியும். உங்களை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் புகழ்வார்கள். தன் நம்பிக்கையும் தைரியமும் மிகுதியாகும்.தோற்றப் பொலிவு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் தேவையில்லாத மன சஞ்சலம் உருவாகலாம்.உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி அடையும். வீட்டில் சுபமங்கள காரியங்களால் தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பொருளாதாரம்
பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமங்களை சந்திக்க வேண்டும்.உண்ண உறங்க நேரம் இல்லாமல் அதிகம் உழைக்க நேரும்.கண் நோய் வரும். கண்களில் சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். கண்ணாடி அணிய நேரும். நிம்மதியான தூக்கம் இருக்காது. அந்நிய மொழிப் புலமை ஏற்படும். அந்திய மொழிய கற்றுக் கொடுப்பதால் வருமானம் வரும். பணப்புழக்கம்அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும். அதிர்ஷ்டம், பண வரவு உங்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் , வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மிகும். உங்களை விட தகுதி குறைந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்து கவுரவிப்பது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வு தடைபடும். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் மெமோ வாங்க நேரும். குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்ய நேரும் உயர் அதிகாரிகளுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். இதற்காக மனம் வருந்தி வேலையை விட்டால் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு .வேலையில் விரும்பிய மாற்றம் கிடைக்கும்.அரசு உத்தியோக வாய்ப்பு சித்திக்கும். எதிரிகள் தாமே விலகுவார்கள்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி சனியுடன் 3,10 அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.வார்த்தையில் நிதானம் தேவை. தீயினால் சுட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட வடு ஆறாது. நீங்கள் விட்ட வார்த்தையே அம்பாக மாறி உங்களை பதம் பார்க்கும். அதே நேரத்தில் வெளுத்தது எல்லாம் பால் என எல்லோரையும் நம்பி திறந்த மனதாக உங்களின் மனக் குமுறலை கொட்டக் கூடாது. உங்கள் முன் நல்லவர் போல் ஆமாம் போட்டு உங்களுக்கு பின்னால் நீங்கள் பேசியதை திரித்து பேசி குற்றவாளி கூண்டில் ஏற்றிவிடுவார்கள். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி திட்டி சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக்குவார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வு மிகுதியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் உங்களிடம் பாசம் காட்டினால் பாசங்கு செய்வது போன்ற மன உணர்வு தோன்றும். பெற்றோரே உலகம் என்று நம்பி வாழ்ந்த உங்களுக்கு பெற்றோரே உரிய நேரத்தில் பாசம் காட்டாமல் இருப்பார்கள்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் சக்ரத்தாழ்வார் நரசிம்மர் வழிபாடு செய்ய மன நிம்மதி தேடி வரும்.
கருணை உள்ளம் கொண்ட மீன ராசியினரே
ராசியில் சூரியன், செவ்வாய், சனி, புதன் சேர்க்கை உள்ளது. வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் வரப்போகிறது.மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். சோதனைகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். பல விதமான மாற்றங்கள் , ஏற்றங்கள் ஏற்படும். விருப்பமும் கனவுகளும் நிறைவேறும். குடும்ப உறவுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு ஆனந்தமாக இருப்பீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். தடைபட்ட சொத்துக்கள் மீதான வாடகை மற்றும் குத்தகை பணம் கிடைக்கும். சகோதர வழியில் நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து ஆதாயம் ஏற்படும்.
வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என அவரவரின் தசாபுத்திக்கு ஏற்ப இடமாற்றம் ஏற்படும். தகவல் தொடர்புகள் மூலம் ஆதாயம் ஏற்படும். தொலைந்த கை மறதியாக வைத்த ஆவணங்கள், முக்கிய பொருட்கள் கிடைக்கும்.செய்தொழில் விருத்தியாகும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். சிலர் முன்னோர்கள் செய்த தொழிலையே சீர்திருத்தி செய்யலாம். ஜென்ம ராசியில் சனி என்பதால் மிகப் பெரிய முதலீட்டில் மிகக் குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை பரிசோதித்து அதில் உள்ள தசாபுத்தி மற்றும் கோட்ச்சார கிரகங்களின் சாதக பாதகம் அறிந்து தொழிலை நடத்தினால் சிறப்பாக இருக்கும்.
தசாபுத்தி சரியாக இல்லாத போது தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள்.குடும்பத்துடன் விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருள் சேரும்.சொத்துக்கள் சேரும்.மனக் கவலைகள் அகலும்.உங்க ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்பார்கள். சிலர் உயில் எழுதலாம் அல்லது குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும்.நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஒரு சிலர் வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் செய்ய நேரும். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். நீண்ட காலமாக தடைபட்ட அனைத்து மங்கல நிகழ்வுகளும் நடைபெறும்.பாக்கிய பலன்களும், புண்ணிய பலமும் கூடும். குல தெய்வ, குடும்ப தெய்வ, முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.தடைபட்ட திருமணம் நடக்கும். காதல் கலப்புத் திருமணம் அதிகரிக்கும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கு வரன் அமைந்து திருமணம் நடைபெறும். 40 வயதைக் கடந்தும் திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.
குருமங்கள யோகம்
மீன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவானுக்கு செவ்வாயின் 4ம் பார்வை உள்ளது. இது குருமங்கள யோகமாகும்.குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கஷ்டத்தில் தவித்த மன ராசியினருக்கு பங்குனி மாதம் நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய மாதமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மனக் கட்டுப்பாடு கூடும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உடல் நலக் கோளாறுகள் சீராகும்.இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும். சொத்துக்களினால் வருமானம் உண்டு. தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தொலைத்து போன, கை மறதியாக வைத்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திரும்பவும் கிடைக்கும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும்.வர வேண்டிய பணம்வரும்.
பொருளாதாரம்
ஜென்ம சனி காலத்தில் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு இனி நிம்மதியான தூக்கம் வரும். இழந்த பணத்தை திரும்ப பெறப்போகிறீர்கள். அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டு.பண விசயத்தில் நிலவிய கெட்ட பெயர்கள் நீங்கப்போகிறது. எவ்வளவு வருமானம் வந்தாலும் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். விரயத்தை சுப செலவுகளான சொத்து, நகை வாங்கவும், குடும்பத்திற்கு சுப நிகழ்வு நடத்தவும் பயன்படுத்தினால் சிறப்பான வெற்றிகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும்.ஊடகங்களில் பணி புரிவர்களின் தனித்திறமை வெளிப்படும்.அரசு போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும். வேலையை தக்க வைக்க அடிமட்ட ஊழியர்களை இது பாதிக்காது.அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.
பெண்கள்
சுய ஜாதக தோஷத்தாலும் கோட்சார கிரகங்களாலும் தடைபட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முழு தைரியத்தோடு வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள்.புதிய அணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ, மனைவிக்கோ திடீர் அதிர்ஷ்டமாக தாத்தா பாட்டி வீட்டுச் சொத்து பெரும் பணம் போன்றவை கிடைக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, புதையல், உயில் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ஜென்ம ராசியில் உள்ள சனியுடன் 2,9ம் அதிபதியான செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். குடும்பத்தினரின் அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். முக்கிய வழக்குகளை ஒத்தி வைக்கவும். பூர்வீகத்தை விட்டு தொழில், உத்தியோகத்திற்கு வெளியூர் சென்றவர்கள் நல்ல பொருளாதாரத்துடன் பூர்வீகத்தில் வந்து செட்டிலாவார்கள்.சிலருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. அதீத வேலை பளுவினால் சோர்வு, உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம். யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். கை விட்டு போன சொத்துக்கள் வீடு தேடி வர வாய்ப்புள்ளது. விற்று விட்ட பூர்வீக சொத்துக்களை திரும்ப வாங்க முயற்சி செய்வீர்கள்.
பரிகாரம்
பங்குனி உத்திர நாளில் இளநீர் அபிசேகம் செய்து குல தெய்வத்தை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406