வழிபாடு

2026 பங்குனி மாத ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

Published On 2026-03-14 17:48 IST   |   Update On 2026-03-14 17:48:00 IST
  • கன்னி ராசி அதிபதியான புதன் மாதத் துவக்கத்தில் வக்ரமாக 6ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.
  • துலாம் ராசியினரே மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11ம் நாள் மேஷ ராசிக்கு செல்கிறார்.

ஆளுமை தன்மை நிறைந்த சிம்ம ராசியினரே

பங்குனி மாதத்தில் உங்களின் ராசி அதிபதி சூரியன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் மற்றும் புதனுடன் சஞ்சரிப்பார்.தைரியத்துடன் வீரமும் அழியாப் புகழும் பெருமையையும் அதிகமாகும்.தெய்வ பலம் மனித பலத்தை விட உயர்ந்தது என்பதை உணர்வீர்கள்.ஒரு சிலர் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும்.பல வருடங்களாக நீங்கள் செய்த பிரார்த்தனை, வழிபாடுகள் பலன் தரும். பள்ளிக்கு சென்று கற்றதை விட வெளி வட்டாரத்தில் அனுபவத்தில் கற்ற பாடம் உங்களுடன் பயணம் செய்யும். காலம் உங்களுக்கு பல வித அனுபவங்களை பாடமாக நடத்தும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும்.

அந்நிய மொழி, பாஷை பேசுபவர்களின் நட்பு கிடைக்கும், அந்நிய மொழி பேசுபவர்களிடையே வாழும் நிலை ஏற்படும். சிலருக்கு மத நம்பிக்கை குறையும். சிலர் அதீத மத நம்பிக்கையால் சட்ட சிக்கலை சந்திக்க நேரும்.பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.நியாயவாதியான நீங்கள் தவறு செய்தவர்களின் குறையை சுட்டி காட்டி அதனால் பிரச்சனைகள் உருவாகும். தாய், தந்தையிடம் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் மன வேதனை அதிகமாகும். சில வயதான பெற்றோர்களுக்கு தாங்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு விடுவோமோ என்ற பய உணர்வு இருக்கும்.

எந்த செயலிலும் நாட்டம் இல்லாமல் மனதில் வெறுமை வாழ்வில் பிடிப்பு இல்லாத நிலை, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். பிதுர் வழி சொத்துக்கள் தொடர்பான மனக்குழப்பம் சஞ்சலம் இருக்கும். ஒரு சிலருக்கு ஆசிரியர், பெற்றோர்களின் நல்லாசியுடன் வெளிநாட்டிற்கு சென்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகும். உயர் கல்விக்கு முயற்சி செய்யும் மாணவ, மாணவிகளுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.பேச்சில் நிதானமும் பொறு மையும் அவசியம்.

முன் கோபத்தில் பகைமை உருவாகும் என்பதால் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கி யம் குறையும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.ஜனன கால ஜாதகத்தில் பாதகமான தசை , புத்தி நடந்தால் சுகவீனத்தால் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரலாம்.சிலர் ஆன்மீகத்தை பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க முயலலாம்.

குருமங்கள யோகம்

சிம்ம ராசிக்கு 5,8-ம் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரை 4,9ம் அதிபதி ஆன செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார்.தொழில் சிறப்பாக நடைபெறும். தொழில் ரீதியான வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பெரிய லாபம் எதுவும் தங்காது. கூட்டம் கூடும் கல்லா கலை கட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும். கையில் பணம் தங்காது.தொழில் போட்டிகளை சமாளிக்க அதிக சிரமங்களை சந்திக்க நேரும். உங்கள் இன, மத இயக்கங்களின் முதன்மை பதவியும், கௌரவமும் தேடி வரும். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகு முறை எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றுத் தரும். குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். அவ்வப்போது குழந்தைகளைப் பற்றிய மன சஞ்சலமும் மனதை வாட்டத் தான் செய்யும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கி தவித்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சிம்ம ராசியினர் புதிய காதல் வலையில் மாட்டாமல் மனதை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும். பங்குச் சந்தையால் பெரும் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வாழ்ந்தவர்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணத்தின் சிறு பகுதி உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, என எதிர்பாராத பணம் உங்களை மகிழ்விக்கும்.

பொருளாதாரம்

மனக் குழப்பம் விலகி தெளிவான மன நிலையுடன் சிந்தித்து செயல்படுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். பணப்புழக்கம்அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வார்கள்.லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தையில் எதிர்பாராத திடீர் மாற்றம் உங்களை நிலை தடுமாற வைக்கும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள்.குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். அழகு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

முதலீட்டாளர்கள்

திருப்புமுனையான வருடம்.தொழில் முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.அஷ்டமச் சனி உள்ளதால் எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

அஷ்டமச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் லாப இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது.புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனையை கொடுத்து பின் வெற்றியை தரும். தொழிலுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். பெரிய தொகையை கடனாக பெற்று அதன் மூலம் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் 'தனி வருமானம் ' மகிழ்சியை தரும். தொழிலாளர்களுக்கு குறைந்த வேலைக்கு நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். செலவுகளை கட்டுக்குள் வைத்து சேமிப்பை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். நேர்மைவாதியான நீங்கள் எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் மிகும்.அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. அடிக்கடி கட்சி மாற்றம் செய்வதையும் வம்பு, வழக்கைத் தவிர்த்தல் நல்லது. உலகத்திற்கும்,கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும்.உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். அரசியலில் புகழையும் செல்வாக்கையும் பெற்று தனித் தன்மையுடன் திகழ்வீர்கள். எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். லாப ஸ்தான குரு பகவானால் உங்களுக்கு மதிப்பு மரியாதை உயரும் திடீர் லாபம் கிட்டும்.

பெண்கள்

புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும்.தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சில வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாயின் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். மாதவிடாய் கோளாறு சீராகும்.திருமணத்திற்கு இந்த மாதம் நாள் குறிக்கலாம். பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள்.

கவனம் தேவை

செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனியுடன்4,9ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வாட்டி எடுக்கும். ஆண்களுக்கு சிறுநீரக பிரச்சனையும் பெண்களுக்கு கருப்பை பிரச்சனையும் உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நிலவும். பெண் களுக்கு நோய் தாக்கம் அதிகம் இருக்கும். மிகக் குறிப்பாக கருப்பை தொடர்பான நோய் ஏற்படும். தவறான உணவு பழக்கம் காரணமாக இளம் பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது கருத்தரிக்கும் தன்மை குறையும். பெண்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். காசோலை , பண மோசடி வழக்கு , விவாகரத்து வழக்கு என வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படும். தங்க நகைகள் என்று போலி நகைகள் வாங்கி ஏமாறுவீர்கள். அழகு , ஆடம்பர பொருட்களை நம்பி ஏமாற்றம் அடைவீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். சிலர் மனத் தாங்கல் அதிகரிப்பால் தலை மறைவு வாழ்க்கை வாழலாம். இனம் புரியாத வெறுமையும் தூக்கமின்மையும் ஏற்படலாம். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும்.

பரிகாரம்

தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய ஹ்ருதயம் படிக்க வேண்டும் அல்லது ஒலிக்க செய்து கேட்க வேண்டும். சனிக்கிழமை அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபடவும்.


அதிபுத்திசாலியான கன்னி ராசியினரே

கன்னி ராசி அதிபதியான புதன் மாதத் துவக்கத்தில் வக்ரமாக 6ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். மாத இறுதியில் பங்குனி 27ல் ராசிக்கு ஏழாமிடம் சென்று சூரியன், செவ்வாய், சனியுடன் இணைகிறார்.புதிய சிந்தனைகள் உதயமாகும். முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். உழைப்பிற்கான உண்மையான பலனை அறுவடை செய்வீர்கள். குல இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை சிறப்பாக வழிநடத்தும்.சுப செலவுகள் அதிகரிக்கும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.குடும்ப உறவுகளின் செய்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களின் அன்பு, ஆதரவு, ஆசீர்வாதம் கிடைக்கும்.

பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்க முடியும். சிலர் கட்டிய வீட்டில் ,சொத்துக்களில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்துவார்கள். புதிதாக வாங்கிய சொத்துக்கள் மீது வில்லங்கம் ஏற்படும். மாணவர்கள் கல்வி நாட்டத்தை அதிகரிக்க வேண்டும். சிலர் பள்ளி மாறலாம். போரிங் போடலாம். விவசாய நிலத்தில் கிணறு தோண்டலாம்.உடல் ஆரோக்கியத்தை சீராக்க வைத்தியச் செலவு செய்ய நேரும். பஞ்சம ஸ்தான ராகுவின் காலம் என்பதால் சுய ஜாதகம் அறிந்து புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்லலாம்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். சிறிய இடப்பெயர்ச்சி செய்ய நேரும். குடியிருக்கும் வீடு,தொழில் நடத்துமிடம் என ஏதாவது ஒரு இடமாற்றம் செய்ய நேரும்.வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் நான்கைந்து மாதங்கள் பூர்வீகம் வந்து செல்லலாம்.பூர்வீகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக குறுகிய காலம் வெளிநாடு சென்று வரலாம்.பல்வேறு சுப பலன்கள் தேடி வந்து கொண்டே இருக்கும். முறையான திட்டமிடல் மன சஞ்ச லத்தை குறைக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும். அலைச்சலும் மந்த தன்மையும் இருக்கும். இயன்றவரை வம்பு வழக்கு சண்டை, சச்சரவுகளை விட்டு ஒதுங்க வேண்டும்.

வழக்குகளில் உங்க ளுக்கு சாதகமாக தீர்ப்பு வராது. ரேஸ் சூதாட்டம் லாட்டரி போன்றவைகள் மீள முடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும்.உடன் பிறந்தவர்களின் வெறுப்பை சம்பா திக்காமல் விட்டு கொடுத்து செல்லவும்.உற்றார் உறவினரிடம் பகையை வளர்க்க கூடாது. சிலருக்கு திருமணம் தடைபடும். திருமணம் நடந்தவர்கள் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்வார்கள். அல்லது கல்யாணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்வார்கள்.

குருமங்கள யோகம்

கன்னி ராசிக்கு 4,7ம் அதிபதியான குரு பகவான் தற்போது தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரை 3,8ம் அதிபதியான செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார். வெகு சுமரான காலம். நல்லது செய்தால் கூட கெட்டதாகவே முடியும்.மாமியார் மருமகள் பிரச்சனை மிகும். புகுந்த வீட்டாருடன் இணக்க மற்ற சூழல் ஏற்படும். நீங்கள் செய்யாத தவறுக்கு தண்டனையை அனுபவிக்கும் காலம். பெற்றோருடன் கருத்து வேறுபாட்டால் தனிக் குடித்தனம் செல்வீர்கள். சிலருக்கு கண் பார்வை குறைவின் காரணமாக கண்ணாடி அணிவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்தது வாங்க கூடாது.சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு , தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம் , விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயத்தை தந்து விடும். குடும்ப செலவு, மருத்துவ செலவு என்று செலவை சமாளித்தே மனம் விரக்தி அடையும். சிக்னம், சேமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் பெற நேரும். உங்களுக்கு எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியை அதிகரிக்கும்.மன சஞ்சலம் மிகுதியான காலம் என்பதால் ஸ்ரீ ராம ஜெயம் ஜெபிக்க வேண்டும்.

பொருளாதாரம்

உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். தங்கம் இல்லாதவர்களுக்கும் நகை சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. இதுவரை சொத்து இல்லாதவர்களுக்கு சொத்து கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் செயல்பாட்டினை மாற்றி அகலக் கால் வைக்காமல் இருப்பதை வைத்து நிம்மதி அடைய முயற்சி செய்ய வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தொல்லைகள் படிப்படியாக குறையும். சொத்துக்களை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வார்கள். காவல் துறையினரின் உதவியால்மீ ட்டு விடுவீர்கள். விவசாயிகள் அதிக கவனத்துடன் பணிகளில் ஈடுபட்டால் நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.

முதலீட்டாளர்கள்

பல தொழில் ஞானம் உண்டு. இவர்களின் தொழில் ஞானம் பிறருக்கு பயன்படும். சுய தேவைக்கு பயன்படாது .உங்களின் திறமைகளை உங்களைச் சார்ந்தவர்கள் பயன்படுத்துவார்கள்.வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும் அல்லது தொழிலாளிகள் மூலம் வழக்கை சந்திக்க நேரும். தொழிற்சாலைகள், சுய தொழில் நடத்துபவர்கள் தங்கள் பணியாளர்களின் செயலில் மாறுபாடு கண்டு மன வேதனை ஏற்படும். எவ்வளவு செய்தாலும் தொழிலாளர்களிடையே அதிருப்தி நிலவும் என்பதால் முன்பை விட முழு கவனத்துடன் அனைத்து பணி களிலும் ஈடுபட வேண்டும். முன்னோர்கள் வழி நோய் தாக்கம் உரு வாகலாம்.

உத்தியோ கஸ்தர்கள்

சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு, மன பாரம் குறையும். வேலைக்கான நேர்காணலில் வெற்றி உறுதி.வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் வாய்ப்பு கிடைத்தாலும் குடும்ப உறவுகளை பிரிய விருப்பமின்றி கிடைத்த வாய்ப்பை வற விடுவார்கள்.சில திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் கடனால் வம்பு, வழக்கால் பாதிப்பு அடைவார்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும்.

அரசியல்வாதிகள்

நாணயமானவர்கள் என்று பெயர் எடுப்பீர்கள். புதிய திட்டத்துடன் சளைக்காமல் செயல் ஆற்றுவீர்கள். கள்ளம், கபடம் இல்லாமல் வெள்ளை மனதுடன் கடமையாற்றுவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். எடுத்த சில செயல்கள் சவ்வாக இழுத்துக் கொண்டே போகும். அதனால் குழப்பமான மனநிலை நிலவும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும்.ஒரு சிலருக்கு கவரவப் பதவிகள் அதிகாரப் பதவிகள் தேடி வரும்.இது வரை பணம் சம்பாதிக்கும் ஆர்வம் மிகுந்த அரசியல்வாதிகள் கூட தியாக மனப்பான்மை மிகுந்தவர்களாக மாறுவார்கள். உங்களின் விரோதிகள் உங்களை வம்பில் மாட்ட தயராக இருக்கிறார்கள் என்பதையும் மறக்க கூடாது. அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து அசிங்கப் படாமல் பேச்சை குறைத்து இறை வழிபாட்டில் நாட்டம் செலுத்த வேண்டும்.

பெண்கள்

கல்வி அறிவு கூடும். கற்ற கல்வியால் பயன் உண்டாகும். ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்வீர்கள். அழகு, ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.மனித நேயமும் தொழில் நியாயமும் நோக்கமாக இருக்கும்.தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்கள்ந டக்கும். பணியாளர்களை அனுசரித்து வேலை வாங்குவீர்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருக்கும். கணவனின் அன்பு, அனுசரனைக்காக ஏங்கிய கன்னி ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார். கூட்டுக் குடும்ப த்தில் இருக்கும் பெண்கள் மாமியாரால் புகழப்படுவீர்கள். சுருக்கமாக எந்த சூழ்நிலையிலும் உங்க ளையும், உங்களைச் சார்ந்த வர்களையும் காப்பாற்றிக் கொள்வீ ர்கள்.

கவனம் தேவை

செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 7ம்ம்மிடமான சம சப்தம ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 3,8ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.இது கன்னி ராசிக்கு சுபத்துவத்தை ஏற்படுத்தும் அமைப்பு அல்ல. மனதுக்குள் பாதுகாப்பற்ற உணர்வு அடிக்கடி தோன்றும். அதனால்தான் யாரையும் இவர்கள் நம்புவதில்லை. வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. தம்பதிகளுக்குள் கெளரவ பிரச்சனையால் அன்யோன்யம் குறைந்து பிரிவினை ஏற்படலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து வாழும் தன்மை இருக்காது. கடன் பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சிறிய வீட்டில் இருக்கும் சிலர் வசதியான வீட்டிற்கு செல்வார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்.புத்திர பாக்கியத்தில் கால தாமதம் ஏற்படலாம். சிலர் ஆன்ம பலம் இழந்து சூழ்நிலை கைதியாக வாழ்வார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தா லும் சளைக்காமல் உழைப்பார்கள்.இவரின் உழைப்பு இவரைவிட பிறருக்கே பயன்படும். தந்தை மகன் கருத்து வேறுபாடு உண்டு.

பரிகாரம்

பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.


மகிழ்ச்சியை விரும்பும் துலாம் ராசியினரே

மாத துவக்கத்தில் உச்சம் பெற்ற நிலையில் இருக்கும் உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரன் பங்குனி 11ம் நாள் மேஷ ராசிக்கு செல்கிறார். சமசப்தம ஸ்தானத்தில் நின்று தன் வீட்டை தானே பார்க்கிறார்.இது துலாம் ராசியினருக்கு விரும்பத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மாதம் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது .குரு கடாட்சத்தால் அனைத்து செயல்களிலும் துணிந்து செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். தோற்றத்தில் மிடுக்கும், செயலில் வேகமும் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்த உங்கள் வாழ்வில் புது வசந்தம் வீசப் போகிறது. உங்களை வாட்டி வதைத்த நோய் தாக்கம் குறையும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப் போகிறது. பிறந்த பலனை அடையப் போகிறீர்கள்.

தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் உங்களை வந்து அடையும்.ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும்.ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிக ரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். சுய முயற்சி, உழைப்பினால் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்டு தேவையானதை அடைவீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.பாக்கிய பலன் மிகுதியாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப் புள்ளியாகும். உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது.மறு திருமண முயற்சி பலிதமாகும்.

சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும்.சிலர் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும்.வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு.சொத்துக்கள் தொடர்பான முக்கிய விஷயங்களை பிறரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.

நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும். எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். ஆரோக்கியத்தை காக்க யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவ உதவியில் சீராக வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆண் வாரிசு கிட்டும். ஜனன ஜாதகத்தில் ஏழாமிடத்தில் உள்ள கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணத்திற்கு சாதகமான தசை புத்தி நடப்பில் இருந்தால் திருமணத் தடை அகலும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.நெருங்கிய சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

குருமங்கள யோகம்

துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குரு பகவானை 2,7ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். இது குரு மங்கள யோகம் ஆகும். உங்களின் புகழ், கவுரவம் உயரும். புதிய நட்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.பணவரவு அதிகரிக்கும்.உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். கலைப் பொருட்கள் சேமிப்பீர்கள். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். குழப்பங்கள் தீர்ந்து தெளிவான நிலை உண்டாகும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புண்ணியத் திருத்தலம் யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும்.கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் வெறுப்பு மறையும். பள்ளி, கல்லூரி பருவத்தில் இருக்கும் துலா ராசி குழந்தைக ளின் பெற்றோர்கள் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலம் . பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வக் குறைவு ஏற்படும். மந்த தன்மை மிகுதியாகும்.

பொருளாதாரம்

விபரீத ராஜ யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட பொருள், வருமானம் போன்றவைகள் கிடைக்கும்.கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகி லாபம் கூடும்.தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும்.மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.காணாமல் போன பொருட்கள் கண்ணில் தென்படும். வீட்டு மனைக்கு அட்வான்ஸாக கொடுத்த பணம் கிணற்றில் போட்ட கல்லாக வீணாகும்.

முதலீட்டாளர்கள்

தொழில் அபிவிருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். தொழில், வேலைக்காக அங்கும், இங்கும் அலைந்து, திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் நிலை உண்டாகும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தொழில் அபிவிருத்தி உண்டாகும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.கல்வி நிறுவனங்கள், நூல் வெளியீட்டாளர்கள், அச்சுத்துறை போன்ற தொழிலில் இருப்பவர்கள் பெரும் பலன் அடைவார்கள். ஏப்ரல் வரை விரயங்கள் சற்று அதிகமாக இருக்கும். அதன்பிறகு விரயங்கள் அனைத்தும் சேமிப்பு, முதலீடாக மாறி உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும்.

உத்தியோகஸ்தர்கள்

வேலைக்காக அங்கும், இங்கும் அலைந்து, திரிந்த நிலை மாறி ஒரே இடத்தில் பணிபுரியும் நிலை உண்டாகும்.அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். இழந்த வெளிநாட்டு வேலை மீண்டும் கிடைக்கும்.சிலர் மற்றவரின் பணியையும் இழுத்துப் போட்டு வேலை செய்து பொருளீட்டும் நிலை உருவாகும். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள்.அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க உகந்த காலம்.சம்பந்தமில்லாத நபர்களின் குறிக்கீட்டால் மன சஞ்சலம் அதிகரிக்கும். கோட்சாரம் சுமராக உள்ளதால் நண்பர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்கக் கூடாது.

அரசியல்வாதிகள்

பய உணர்வு நீங்கும்.மன சஞ்சலம் அகலும்.ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.6ம்மிடத்தில் பதவி ஷ்தான அதிபதி சனி பகவான் நிற்பதால் எதிரிகள் நண்பர்கள் போல் நடித்து உங்களைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொண்டு உங்களை கவிழ்க்க முயலலாம். எனவே புதிய நண்பர்களிடம் கவனம் தேவை. அதே நேரத்தில் ஏழாமிடம் சமுதாய பழக்க வழக்கம் பற்றிக் கூறுமிடம் என்பதால் பொதுமக்களிடம் கவுரவம் பார்க்காமல் சகஜமாக பழகினால் தேர்தல் காலத்தில் அது ஓட்டாக மாறும்.ஆரோக்கியத்தை காப்பது நல்லது. யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்களிடம் கவனம் தேவை.

பெண்கள்

அனைத்து தடைகளும் தகறும். வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில் முன்னேற்றமான, சிறப்பான நன்மைகளை அடையக் கூடிய நிலை உண்டாகும். புதிய முதலீடுகளால் தொழிலில் ஏற்றம் காணலாம்.பதவி உயர்வு, வருமான உயர்வு உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் நடைபெறும். உங்கள் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும்.

கவனம் தேவை

செவ்வாய் சனி சேர்க்கை துலாம் ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 2,7ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார்.இது வரையில் பெற்ற வெற்றிகள் எல்லாம் தடைபட்டது போன்ற உணர்வு மேம்படும். உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். பேராசையால், முறையான திட்டமிடுதல் இன்மையால் குழப்பமான மன நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும் . பய உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழல் வரும். திருமணம், குழந்தை பாக்கியம் தடைபடும். குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகமாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனை யாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதனால் மன வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும்.இயற்கை உணவுகளை உண்பதால் ஆரோக்கியத் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.

பரிகாரம்

வெற்றிலை, பாக்கு பழத்துடன் பால் பாயசம் வைத்து வெள்ளிக் கிழமை இஷ்ட குலதெய்வம் , மகாலட்சுமியை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.


அரசியல் ஆர்வம் மிகுந்த விருச்சிக ராசியினரே

பங்குனி மாதத்தில் உங்களின் ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய (பங்குனி 19 (2.4.2026) ஸ்தானத்தில் உள்ள சனியுடன சேரப் போகிறார்.இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். செயல்திறனில் மாற்றம் ஏற்படும். சுப நிகழ்வுகள் சுப செலவுகளையும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பல வழிகளில் பணம் வந்து மனதையும் பையையும் நிரப்பும்.கஷ்டங்கள், கவலைகள் நீங்கி பொருளாதார நிலைமை சீராகும்.வீடு, நிலம், வாகனம் போன்ற சுப விரைய செலவுகள் உண்டாகும்.

வேலையில் லகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். உற்சாகமாக எதையும் கற்றுக் கொள்வீர்கள். குலதெய்வத்தின் கருணை முழுவதுமாக கிடைக்கும்.பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு இப்போது சாதகமாக பலன் தரும்.முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். நடப்பதெல்லாம் கனவா? என்று நினைக்க தோன்றும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், வரதட்சணை பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல், உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும். உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம், ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள்.

தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும். ஏற்கனவே வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். இயன்ற வரை பெரிய கடன் வாங்கி விவசாயம் செய்தலை தவிர்க்க வேண்டும். உங்களின் சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்ற ஏற்ற காலம்.

இந்த மாதம் கடனும் விரையமும் உங்களுக்கு வரப்போவது உறுதியாகி விட்டது. கடன் வாங்கி சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. தாய், தந்தையின் ஆரோக்கியம் சீராகும். உற்றார், உற வினர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்விக்கும். மேலும் போட்டித் தேர்வு எழுதும் விருச்சிக ராசி குழந்தைகள் மாநில, மாவட்ட , பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெறுவது உறுதி.கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பால் பூர்வீக தொழிலை பிரிக்க நேரும். மனதில் சில சில சங்கடங்கள் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

குருமங்கள யோகம்

விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் 2,5ம் அதிபதியான குருவை தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார் இது குருமங்கள யோகமாக பலன் தரும்.மிகப்பெரிய வாழ்வியல் மாற்றங்களைத் சந்திப்பீர்கள்.பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும்.ஆன்ம பலம் பெருகும். புத்திரப் பிராப்த்தத்தில் நிலவிய தடைகள், தாமதங்கள் அகலும். பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல திருப்பு முளையான சம்பவங்கள் நடைபெறும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும்.குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. விட்டு விலகிய சொந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு நாடி வந்து பேசுவார்கள்.மனக்கவலைகள் நீங்கும். இழுபறி நிலை மாறி மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும்.வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது.பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

பொருளாதாரம்

நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இலக்குகளை நிர்ணயித்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும்.தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத் துணையின் வருமானம் இரட்டிப்பாகும்.பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். தொழில் , திடீர் உயில் சொத்து, லாட்டரி , ரேஸ், பங்குச் சந்தை என அனைத்து வழிகளிலும் பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். அடமான நகைகள் சொத்துக்களை மீட்க கூடிய வகையில் உபரி வருமானம் கிடைக்கும். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும். பணம் வந்த சுவடு இருக்கும் போன சுவடு தெரியாது. தாங்க முடியாத விரயம் மன உளைச்சலை தரும்.

முதலீட்டாளர்கள்

இது வரை ஒரு தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னொரு தொழில் செய்யும் எண்ணம் வரும். சில்லரை வணிபம் செய்தவர்கள் மொத்த வியாபாரம் செய்வார்கள். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும்.தொழில் போட்டி அதிகமாகும். போட்டியை சமாளிக்க உலகத்தில் எத்தனை குறுக்கு வழி உண்டோ அத்தனையையும் பின்பற்றும் சூழல் ஏற்படும். மூளையை மூலதனமாக்கி தொழில் செய்பவர்களுக்கு நல்ல சிந்தனை என்றால் என்ன? என்று கேட்கும் வகையில் கள்ளத்தனம் மிகும்.கூட்டம் கூடினாலும் கல்லா கலை கட்டாது.அரசின் வரிச் சுமைகாரணமாக குலத் தொழிலைச் செய்து வருபவர்கள் அதிலிருந்து விடுபட்டு வேறு தொழிலுக்கு செல்வார்கள்.வெளியூரில் வேலை பார்ப்பவர்கள். குலத் தொழிலை செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள்

படித்து முடித்தவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலையில் சேர உத்தரவு வரும். பணிச்சுமை அதிகரிப்பால் செயல்பாடுகளில் மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். தீர்க்க யோசிக்காமல் எடுத்த முடிவு எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலருக்கு சிறிய பதவி உயர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் வேகம், விவேகத்தை கடைபிடித்தால் மட்டுமே உங்களை காத்துக் கொள்ள முடியும்.

அரசியல்வாதிகள்

பொது வாழ்க்கையில், மிகப் பெரிய பதவியில் இருப்பவர்கள் கவனமாக காய் நகர்த்த வேண்டும்.அரசு சார்ந்த ஒப்பந்தங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் அரசு ஒப்பந்தங்களை மீறுவது , அலட்சியம் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆக்க பூர்வ பணிகளை செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள் இழந்த பதவி உங்களை தேடி வரும். அரசியலில் இருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சிக்கலாம்.சனி பகவானின் அருள் இருந்தால் மட்டுமே பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். தசாபுத்திகள் சாதகமான அரசியல் வாதிகள் ஜெயிப்பது உறுதி.

பெண்கள்

பெண்களுக்கு மிக சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு நீடிக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். குடும்ப ஒற்றுமை'பலப்படும்.பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது. பொன், பொருள் சேரும்.உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும் காலம். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.

செவ்வாய் சனி சேர்க்கை

விருச்சிக ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பங்குனி 19 (2.4.2026) அன்று சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறி வேறு மத வழிபாடு செய்வார்கள். நிம்மதியான தூக்கம் இருக்காது. பக்கத்து வீட்டுக்காரர்கள், தெருவாசிகளுடன் எதாவது கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். நட்பு பாராட்டும் மனம் இல்லாவிட்டலும் பகையை வளர்க்காமல் இருந்தாலே போதும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் அலைய நேரும். உறவினர்களால் மதிப்பு, மரியாதை குறையும். மன வெறுப்பால் பூர்வீகத்தை விட்டு வெளியேறி வாழும் எண்ணம் தோன்றும்.தீய பழக்கங்களை மனம் நாடும். சனியின் ஆதிக்கத்தினால் உடல் மெலியும். சனியின் தானியமான எள்ளை சாப்பிட்டால் உடலில் சதைப்பிடிப்பு கூடும். கடினமாக உழைத்து வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

பரிகாரம்

பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Tags:    

Similar News