சனிக்கிழமையில் மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்கிடாதீங்க..!
- சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம்.
- இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம்.
இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருள். அதனால் சனிக்கிழமைகளில் இரும்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரும்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் சனி பகவானுடன் தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது.
* சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் என்பதால், இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம். அதனால் பலன் கூடும்.
* எண்ணெய் மற்றும் உப்பு வாங்குவதையும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி தவிர்த்துவிடலாம்.
* சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம்.
* உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதால் ஒரு ஜாடியில் உப்பைக் கொட்டி அதில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு வைத்தால் போதும் செல்வம் செழிக்கும்.
* சனிக்கிழமையில் புதிய ஆடைகளை வாங்குவதையும் தவிர்த்துவிட வேண்டும். அப்படியே வாங்கினாலும் கருப்பு நிற ஆடையைத்தான் வாங்க வேண்டுமாம்.
* அன்றைய நாள் புதிய ஆடைகளையும் அணியக்கூடாது என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.
குறிப்பாக சனிக்கிழமையில் துடைப்பம் மற்றும் கருப்பு எள் முதலானவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். இவற்றை சனிக்கிழமையில் வாங்கினால் சனிபகவானின் கோபம் அதிகரிக்கும் என்றும் அதனால் நம் வாழ்வில் இன்னல்கள் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.