புதுச்சேரி

உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்ட காட்சி.

உலக உணவு பாதுகாப்பு தினம்

Published On 2022-06-17 14:59 IST   |   Update On 2022-06-17 14:59:00 IST
  • மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
  • கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உணவு தொழில்நுட்பத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உணவு தொழில்நுட்பத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மலர்க்கண் சிறப்புரையாற்றினார். உணவு தொழில்நுட்பத்துறை தலைவர் திருச்செல்வம் வரவேற்புரையாற்றினார். புதுவையில் உள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உணவு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் உணவு சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியின் உணவு தொழில்நுட்பத்துறை மற்றும் பிற துறைகளை சேர்ந்த சுமார் 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை உணவு தொழில்நுட்பத் துறையின் உதவி பேராசிரியர்கள் சாந்தலட்சுமி மற்றும் பாக்யா நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News