புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி நீரில் மூழ்கி சாவு

Published On 2022-10-09 13:20 IST   |   Update On 2022-10-09 13:20:00 IST
  • குடிபோதையில் ஆற்றில் கால்கழுவ சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி இறந்து போனார்.
  • இந்த நிலையில் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் சக்திவேல் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.

புதுச்சேரி:

பாகூர் அருகே குடிபோதையில் ஆற்றில் கால்கழுவ சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி இறந்து போனார்.

கடலூர் சாவடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது37). இவர் லாரியில் செங்கல் லோடு ஏற்றும் வேலை செய்து வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் தினமும் பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடிக்க செல்வது வழக்கம். அதுபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சக்திவேல் மது குடிக்க சோரியாங்குப்பம் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் சக்திவேல் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். குடிபோதையில் சக்திவேல் ஆற்றில் கால்கழுவ சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News