புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-02-01 05:21 GMT   |   Update On 2023-02-01 05:21 GMT
  • புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • சரஸ்வதி அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சசிகலா சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். காத்தவராயனுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது.

புதுச்சேரி:

புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுவை முத்திரையார் பாளையம் கோவிந்தன் பேட் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் காத்தவராயன் கட்டிட தொழிலாளி இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு சசிகலா, திவ்யா என்ற மகளும் ராஜகோபால் என்ற மகனும் உள்ளனர். சரஸ்வதி அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சசிகலா சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். காத்தவராயனுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். சில சமயங்களில் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சசிகலா கல்லூரிக்கு சென்று விட்டார். அவரது தாய் வேலைக்கு சென்றிருந்தார். சசிகலாவின் தங்கை திவ்யா தம்பி ராஜகோபால் பள்ளி சென்று விட்டனர். காத்தவராயன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். சசிகலாவின் பாட்டி புஷ்பா காத்தவராயன் வீட்டுற்கு வந்து காத்தவராயனை பார்த்து சென்றுள்ளார். மாலை 3.30 மணியளவில் சசிகலா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் உள்ள கொக்கியில் காத்தவராயன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா தனது உறவினர்.

தமிழ்வேந்தன் மற்றும் அக்க்ம் பக்கத்தினர் உதவியுடன் காத்தவராயனை மீட்டு கதிர்காமம் அரசு மருந்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து என்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் காத்தவராயன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் குடி போதையில் இறந்தாரா அல்லது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை. இது குறித்து காத்தவராயனின் மகள் சசிகலா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News