புதுச்சேரி

மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

ஆதரவற்ற மாணவிகளுக்கு நலத் திட்ட உதவி

Published On 2022-11-27 07:33 GMT   |   Update On 2022-11-27 07:33 GMT
  • தேசிய மாணவர் படை உதய நாளை முன்னிட்டு கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன பாபு சமுத்திரம் ஆதரவற்ற பெண் குழந்தைகள் விடுதியில் அவர்களுக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் பெண்கள் இல்ல விடுதியின் காப்பாளர்கள் எலிசபத் செலின்மற்றும் என்.சி.சி. மாணவர்கள் விடுதியின் மாணவிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

தேசிய மாணவர் படை உதய நாளை முன்னிட்டு கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன பாபு சமுத்திரம் ஆதரவற்ற பெண் குழந்தைகள் விடுதியில் அவர்களுக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலித்தீ ர்த்தால் குப்பம் காமராஜர் கலைக்கல்லூரியின் சுற்றுலாத்துறை தலைவரும் தேசிய மாணவர் படை அலுவலருமான கதிர்வேல் வரவேற்று பேசினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படை இளநிலை அதிகாரி சுனில்குமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு போர்வை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உபயோக பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் பெண்கள் இல்ல விடுதியின் காப்பாளர்கள் எலிசபத் செலின்மற்றும் என்.சி.சி. மாணவர்கள் விடுதியின் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News