புதுச்சேரி
ஜோதி குருகுலத்துக்கு சென்ற பா.ஜனதா எம்.பி.க்கு வரவேற்பு
- பா.ஜனதா தேசிய பொது செயலாளர் அருண்சிங் எம்.பி. 2 நாட்கள் பயணமாக புதுவை வந்திருந்தார்.
- இந்த நிலையில் அவர் தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்திற்கு சென்றார்.
புதுச்சேரி:
பா.ஜனதா தேசிய பொது செயலாளர் அருண்சிங் எம்.பி. 2 நாட்கள் பயணமாக புதுவை வந்திருந்தார். இந்த நிலையில் அவர் தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்திற்கு சென்றார். அங்கு அருண்சிங் எம்.பி.யை குருகுல நிறுவனர் ஜோதி செந்தில் கண்ணன் கர்லாகட்டை வழங்கி வரேவற்றார்.மேலும் அவரிடம் கர்லாகட்டை தினத்தை முன்னிட்டு 100 பேர் கர்லாகட்டை சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சாய்.ஜெ.சரவணன், பாஜனதா மாநில தலைவர் சாமிநாதன், கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் வெற்றிச்செல்வன் மற்றும் தொகுதி நிர்வாகிகள், கர்லாகட்டை பயிற்சியாளர்கள் பெரியசாமி, ஆனந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.