புதுச்சேரி
- புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை
- ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தமிழக முதல்- அமைச்சர் ஆதரித்த மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளருக்கு புதுவையில் கூடுதலாக ஒரு வாக்கு கிடைத்திருப்பது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.