புதுச்சேரி

மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் வன மகோற்சவ விழா நடந்த காட்சி.

வன மகோற்சவ விழா

Published On 2022-07-09 14:47 IST   |   Update On 2022-07-09 14:47:00 IST
  • தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும் இணைந்து வன மகோற்சவம் விழாவினை நடத்தியது.
  • மரங்களின் பயன்பாடு குறித்தும் அதை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் பேசினார்

புதுச்சேரி:

மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியும், புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும் இணைந்து வன மகோற்சவம் விழாவினை நடத்தியது.

ஆசிரியர் சசிக்குமார் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி விழாவிற்கு தலைமை தாங்கி வனம் மற்றும் மரங்களின் பயன்பாடு குறித்தும் அதை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் பேசினார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் ஒருங்கிணைப்பாளர் நித்யா சிறப்புரையாற்றினார்.பள்ளி ஆசிரியர்கள் சுமதி ராகவன், ஜெயசுந்தர், பாவாடைசாமி, பாலிவிஜய், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தென்னரசு, வினோத், சதீஷ், வெங்கடேசன், செல்வபிருந்தா ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

Similar News