புதுச்சேரி

பா.ஜனதா பட்டியலின அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவர் பங்கேற்ற காட்சி.

வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்

Published On 2022-12-26 13:58 IST   |   Update On 2022-12-26 13:58:00 IST
  • பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  • விழாவில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி பட்டியல் அணியின் சார்பில் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் வாஜ்பாய் பிறந்த தினம், மனதின் குரல் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மடுவுபேட்டில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிக்கு பா.ஜனதாவின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் நிகழ்ச்சியில் வாஜ் பாய் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி. மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மடுவு பேட்டை பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 5 கிலோ அரிசி பட்டியல் அணியின் சார்பில் வழங்கப்பட்டது.

பிறகு மடுகுபேட்டில் சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. இதில் மாநில தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன், மாநில மீடியா பொறுப்பாளர் குருசங்கர்,பட்டியல் அ ணியின் பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.சி. கஜேந்திரன், சுப்பிரமணி, ராஜேஸ்வரி, சமூக வலைதள பிரிவு பொறுப்பாளர் அருள்குமார், மடுகுப்பை பகுதியின் முக்கிய பொறுப்பாளர் விஜய், பூபதி கலந்து கொண்டனர்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் போது லாஸ்பேட் மண்டல தலைவர் சோமசுந்தரம் பொறுப்பாளர் தண்டபாணி மகளிர் அணி, மாநில பொதுச் செயலாளர் கனகவல்லி குமார் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News