புதுச்சேரி

சிமெண்ட் சாலை பணிகளை வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

வைத்திலிங்கம் எம்.பி.யுடன் நேரு எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

Published On 2023-02-03 08:18 GMT   |   Update On 2023-02-03 08:18 GMT
  • புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கந்தப்ப முதலியார் வீதியில் நகராட்சி மூலம் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது.
  • ஆய்வின் போது புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் இடங்களில் மழைநீர் தேங்காத வாய்க்கால் அமைத்து கொடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கந்தப்ப முதலியார் வீதியில் நகராட்சி மூலம் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது.

இப்பணிகளை வைத்திலிங்கம் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் இடங்களில் மழைநீர் தேங்காத வாய்க்கால் அமைத்து கொடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

பணிகளை விரை வாகவும் தரமாகவும் செய்து கொடுக்கும்படி அதிகாரி களை வலியுறுத்தினர்.

ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், பொதுப் பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் வல்லவன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், நகராட்சி இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள், மனித நேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த கைலாஷ், சாமிநாதன், சீதாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News