புதுச்சேரி

அனிபால் கென்னடி கலந்துகொண்டு கடலில் பால் ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.

சுனாமி நினைவு தினம்-கென்னடி எம்.எல்.ஏ. அஞ்சலி

Published On 2022-12-27 13:36 IST   |   Update On 2022-12-27 13:36:00 IST
  • 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உப்பளம் தொகுதியில் உள்ள சோனாம் பாளையம், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
  • இதற்காக முதல்-அமை ச்சரிடம் கலந்து ஆலோசித்து வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார்.

புதுச்சேரி:

18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உப்பளம் தொகுதியில் உள்ள சோனாம் பாளையம், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதில் தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி கலந்துகொண்டு கடலில் பால் ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது சுனாமி நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பிரம்மாண்டமாக ஒரு சுனாமி நினைவு சின்னம் கட்டாயம் அமைக்கப்படும்.

இதற்காக முதல்-அமை ச்சரிடம் கலந்து ஆலோசித்து வலியுறுத்துவேன் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், பொருளாளர் சண்முகம், தி.மு.க. பிரமுகர்கள் நோயல், மணிமாறன், காலப்பன், செங்குட்டு தினேஷ், ரவிக்குமார், அறிவழகன், மாறன், ரகுமான் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News