புதுச்சேரி

கோப்பு படம்

டாக்டரிடம் பணம் பறிக்க முயற்சி

Published On 2022-07-15 09:42 GMT   |   Update On 2022-07-15 09:42 GMT
  • டாக்டரிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இவரது செல்போன் வாட்ஸ் ஆப்க்கு புதிய நம்பரிலிருந்து மெசேஜ் வந்தது.

புதுச்சேரி:

புதுவை போலீஸ் டி.ஜி.பி.யின் பெயரை பயன்படுத்தி டாக்டரிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கதிர்காமம் இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் முருகேச பாரதி.இவரது செல்போன் வாட்ஸ் ஆப்க்கு புதிய நம்பரிலிருந்து மெசேஜ் வந்தது.

அந்த நம்பரின் வாட்ஸ்-ஆப் புகைப்படமாக புதுவை போலீஸ் டி.ஜி.பி ரன்வீர் சிங் கிருஷ்ணியாவின் புகைப்படம் இருந்தது.தொடர்ந்து பேசிய அந்த நபர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பரிசளிப்பதற்காக பணத்தை அனுப்புமாறு கூறினார். இதனால் சந்தேகமடைந்த டாக்டர் முருகேச பாரதி இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டார்.

அதன் பின்னரே பேசியது வடமாநிலத்தை சேர்ந்த மர்மநபர் என தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து டாக்டர் முருகேச பாரதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News