புதுச்சேரி

ஏழை தொழிலாளிக்கு தள்ளுவண்டிைய சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி. அருகில் யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜ், துணை நிறுவனர்கள் முருகன், பிரகாஷ், அகிலன் உள்ளனர்.

2 பேருக்கு தள்ளுவண்டி-ரிக்‌ஷா உதவி

Published On 2022-07-31 12:13 IST   |   Update On 2022-07-31 12:13:00 IST
  • எளிய மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது யுவர் பேக்கர்ஸ் நிறுவனம்.
  • மேலும் மணவெளி பகுதியை சேர்ந்த 25 குடும்பத்தினருக்கு மாதந்தோறும் தலா ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புதுவையில் தினந்தோறும் 400 பேருக்கு இலவச உணவு, ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயத்தொழில் என ஏழை , எளிய மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது யுவர் பேக்கர்ஸ் நிறுவனம்.

மேலும் மணவெளி பகுதியை சேர்ந்த 25 குடும்பத்தினருக்கு மாதந்தோறும் தலா ஒரு குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே இம்மாதம் நடை பெற்ற அரிசி வழங்கும் நிகழ்ச்சியில், யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 2 பேருக்கு, சுய தொழிலில் ஈடுபடும் விதமாக தள்ளு வண்டியும், ரிக்-ஷாவும் வழங்கினார்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கபிலன் என்ற சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3000-க்கான காசோலையை யும் அவர் வழங்கினார். இந்த நிதிஉதவி மாதந்தோறும் கபிலனின் மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்படும் எனவும் கிருஷ்ணராஜூ அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், யுவர் பேக்கர்ஸ் துணை நிறுவனர்கள் முருகன், பிரகாஷ், அகிலன் மற்றும் மணவெளி பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News