புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் ஆலோசனை நடத்திய காட்சி.
மாநில காங். நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டில் கட்சியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் காங்கிரஸ் தலைமை தெரிவித்து வருகிறது.
புதுச்சேரி:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கட்சியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் காங்கிரஸ் தலைமை தெரிவித்து வருகிறது. இதற்காக அந்தந்த மாநில பொறுப்பாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுவை மாநில நிர்வாகிகள் கூட்டம் செண்பகா ஓட்டலில் நடைபெறறது. புதுவை பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ரமேஷ் பரமத், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள்
எம்.எல்.ஏ.க்கள் அனந்த–ராமன், நீலகங்காதரன், எம்.என்.ஆர். பாலன், நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, ரகுமான், இளையராஜா, விக்னேஷ் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.Top adviser consulting with state congressional executives
கூட்டத்தில் தினேஷ் குண்டுராவ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், கட்சியில் செயல்பட வேண்டிய விதம், கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.