புதுச்சேரி

கோப்பு படம்.

டிரைவர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-01-28 04:40 GMT   |   Update On 2023-01-28 04:40 GMT
  • தனியார் பள்ளி வாகன டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார். முதலியார்பேட்டை மொட்டையபடையாட்சி வீதியை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது சகோதரர் காஞ்சிபுரம் மாவட்டம் மாடபாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்.
  • முதலியார்பேட்டை கெங்கையம்மன் கோவில் அருகே வந்த போது திடீரென அரிகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

புதுச்சேரி:

தனியார் பள்ளி வாகன டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார். முதலியார்பேட்டை மொட்டையபடையாட்சி வீதியை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது சகோதரர் காஞ்சிபுரம் மாவட்டம் மாடபாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி இறந்து விட்டதால் கடந்த 1½ ஆண்டுகளாக பத்மாவதி வீட்டில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் வாகன டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

பணி முடிந்து அரிகிருஷ்ணன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். முதலியார்பேட்டை கெங்கையம்மன் கோவில் அருகே வந்த போது திடீரென அரிகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

உடனே அவருடன் வந்த மற்ற ஊழியர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது சகோதரி பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News