கோப்பு படம்.
- திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- வேலைக்கு செல்வதற்காக ராஜா குளித்து விட்டு உடை மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சாய்ந்தார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
திருக்கனூர் அருகே தேத்தாம்பாக்கம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் தீப்பாஞ்சான். இவரது மகன் ராஜா (வயது34). டிரைவர் வேலை செய்து வந்தார். வசந்தமுல்லை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வேலைக்கு செல்வதற்காக ராஜா குளித்து விட்டு உடை மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சாய்ந்தார்.
உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு ஊசுடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீர் மாரடைப்பால் ராஜா இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜாவின் தந்தை தீப்பாஞ்சான் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை மூலக்குளம் அருகே முத்து பிள்ளை பாளையம் ராதாநகரை சேர்ந்தவர் லீலா வினோத். இவரது மனைவி கோமதி. இவரை பார்க்க வேலூர் குடியாத்தத்தை சேர்ந்த இவரது தந்தை மோகன்(வயது62) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வந்திருந்தார்.
இந்த நிலையில் ஊருக்கு பஸ்சில் செல்ல மோகன் புதிய பஸ் நிலையத்துக்கு அப்போது பஸ்சுக்காக அங்குள்ள இருக்கையில் அமர்ந்து காத்திருந்த போது திடீரென மோகன் மயங்கி சாய்ந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார். நெஞ்சுவலி காரணமாக மோகன் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகள் கோமதி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.