கோப்பு படம்.
- மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அடிக்கடி மது குடித்து விட்டு தனது பெற்றோரிடம் மனைவி பிரிந்து சென்றதை கூறி வருத்தப்பட்டு வந்தார்.
புதுச்சேரி:
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே மேல் திருக்காஞ்சி ஆனந்தா நகரை சேர்ந்தவர் அந்தோணி சாமி. இவரது இளைய மகன் பெலிக்ஸ் (வயது 33) இவருக்கும் சென்னையை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணுக்கும் கடந்த 2018 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரண மாக ஜெனிபர் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் பெலிக்ஸ் மன வேதனைக்கு உள்ளானார்.இதனால் அவர் மது பழக்கத்துக்கு ஆளானார்.
அடிக்கடி மது குடித்து விட்டு தனது பெற்றோரிடம் மனைவி பிரிந்து சென்றதை கூறி வருத்தப்பட்டு வந்தார்.
அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் மனமுடைந்த பெலிக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டின் அருகே காலி மனையில் உள்ள வேப்ப மரத்தில் அவர் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை அந்தோணி சாமி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.