புதுச்சேரி

பவளவிழா நூலை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்ட காட்சி.

தமிழ்சங்க தலைவர் பவளவிழா நூல் வெளியீட்டு விழா

Published On 2022-07-24 09:07 IST   |   Update On 2022-07-24 09:07:00 IST
  • புதுவைத்தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்க விழா நடந்தது
  • விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பவள விழா பாமாலை எனும் நூலினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார்.

புதுச்சேரி:

புதுவைத்தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்க விழா நடந்தது. விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து பவள விழா பாமாலை எனும் நூலினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார். இதனை முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, அனைத்திந்திய தமிழ்ச் சங்கத் தலைவர் ஆவடிகுமார், தமிழ்ச் சங்க செயலர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் ஆதிகேசவன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் இளைஞர்களுக்கு தேவையான கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்புகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொகுதி தி.மு.க. துணை செயலாளர் நாசர், இர்பான், தாபித், லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News