புதுச்சேரி
கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் மீட்ட காட்சி.

புதுவை சட்டசபை எதிரே பரபரப்பு - அம்பேத்கர் சிலை மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

Published On 2023-04-05 13:25 GMT   |   Update On 2023-04-05 13:25 GMT
  • ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாலிபர் கீழே இறங்க மறுத்து மேலேயே நின்று கொண்டிருந்தார்.
  • நீண்ட போராட்டத்துக்கு இடையே நைசாக பேசி மேலே ஏறி வாலிபரை பத்திரமாக மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபை எதிரே அம்பேத்கர் சிலை உள்ளது. இங்கு நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்தார்.

திடீரென அதன் அருகில் உள்ள மரக்கிளைகள் வழியாக அம்பேத்கர் சிலை உச்சி பகுதிக்கு ஏறினார்.

அங்கிருந்து ஒற்றைக்கையில் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த பெரிய கடை போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றனர். தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் கீழே இறங்கி பேசுமாறு கூறினார்.

ஆனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த வாலிபர் கீழே இறங்க மறுத்து மேலேயே நின்று கொண்டிருந்தார்.

நீண்ட போராட்டத்துக்கு இடையே நைசாக பேசி மேலே ஏறி வாலிபரை பத்திரமாக மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அதில் அந்த வாலிபர் தனது பெயர் வெங்கடேசன், சண்முகம் என கூறியதோடு திருக்கனூர், மேட்டுப்பாளையம், பாக்கம் கூட்ரோடு என முகவரியை மாற்றி மாற்றி கூறினார்.

மேலும் கடலில் குளிக்க சென்ற தன்னை அங்கிருந்தவர்கள் தாக்கியதால் மனவேதனையடைந்தேன். இது பற்றி அம்பேத்கரிடம் நியாயம் கேட்கவே அவரது சிலை மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.

அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவரது உறவினர்களை கண்டுபிடித்து வாலிபரை ஒப்படைத்ததற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News